states

img

திரிணாமுல் காங்கிரசின் ஊழல்கள்

திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தபின் கோடானுகோடி ரூபாய் சம்பாதித்து சொத்துக்கள் வாங்கியுள்ள நபர்களின் பட்டியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பிரசுரமாக வெளியிட்டுள்ளது.

‘‘பஹராயே பப்ளிக்’’ என்னும் பெய ருடன் வெளியிடப்பட்டுள்ள இப்பிர சுரத்தில் ‘‘மிகக் குறுகிய காலத்தில்  கோடானுகோடி ரூபாய் சொத்துக் களுக்கு அதிபதிகளாகியுள்ள திரிணா முல் காங்கிரசார் பட்டியல் வெளியிடப் பட்டிருக்கிறது. இந்தப் பட்டியல் தொடரும்’’ என்று இப்பிரசுரத்தை வெளி யிட்ட கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் கூறினார். சமீபத்தில் பாக்டீ (Bogtui) என்னு மிடத்தில் திரிணாமுல் காங்கிரசிற் குள்ளேயே இரு கோஷ்டிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு, பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். இந்த இடத்திற்கு முகமது சலீம்  விரைந்து சென்று, சட்ட விரோத வர்த்தகத்தில் திரிணாமுல் காங்கிரசுக்குள் கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட போட்டியே  படு கொலைகளுக்கான காரணம் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். இப்பிரசுரத்தில் முதல் கட்டமாக ஹவுரா, ஹூக்ளி, பங்குரா, கிழக்கு பர்து வான், வடக்கு 24 பர்கானா, தெற்கு  24 பர்கானா ஆகிய ஆறு மாவட்டங் களில் உள்ள 19 திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றி ருக்கின்றன. இவர்கள் எந்தெந்த வகை களில் கோடீஸ்வரராகி இருக்கிறார்கள் என்ற விவரங்களும் இதில் இடம் பெற்றி ருப்பதாக முகமது சலீம் கூறினார். 

பஞ்சாயத்து மட்டத்தில் உள்ள திரி ணாமுல் காங்கிரசாரால் கட்டப்பட்டுள்ள  நான்கு மாபெரும் மாளிகைகளின் படங்களும் இதில் இடம்பெற்றி ருக்கின்றன. ‘‘மாநிலத்தைக் கொள்ளை யடித்துவரும் மற்ற திருடர்களின் பெயர்களும் படங்களும் விரைவில் வெளியிடப்படும்’’ என்றும் முகமது சலீம் கூறினார்.   மால்டாவில் மோதல் இதற்கிடையில் மால்டா கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட நிலத்தை யார் வைத்துக்கொள்வது என்று திரிணா முல் காங்கிரசில் இரு கோஷ்டி களுக்கு இடையே மோதல் நடை பெற்றுள்ளது. கோஷ்டியினர் பரஸ்பரம் வெடிகுண்டுகளை வீசினர், துப்பாக்கி களால் சுட்டனர். இதேபோன்று கோபால்பூர் கிராமத்தில் நடைபெற்ற மோதலில் 10 வீடுகள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே சௌகி-மிர்தாபூர் இடையேயுள்ள சுமார் 21 ஏக்கர் நிலத்தை யார் சொந்தம் கொண்டாடுவது என்பதில் திரிணாமுல் காங்கிரசின் கீழ் உள்ள மாணிக்சக் பஞ்சாயத்து சமிதியின் உறுப்பினர் சைபுதீன் ஷேக்கிற்கும், கோபால்பூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான நாசிர் அலிக்கும் இடையே மோதல்கள்  நடைபெற்று வருகின்றன. இங்கே நடை பெற்றுவரும் வன்முறை வெறியாட்ட ங்கள் குறித்து பரஸ்பரம் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் மோதலை மாவட்ட திரிணா முல் தலைவர்கள் கண்டுகொள்ளாமல் ஒதுங்கியே இருக்கிறார்கள்.       (ந.நி.)