states

பீகார் முதல்வருக்கு கொரோனா

பாட்னா, ஜூலை 26- பீகார் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக நிதிஷ் குமார் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவ ருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.  அவர் தற்போது தனிமைப்படுத் தப்பட்டுள்ளார் எனவும் மேலும் மருத்து வர்கள் அவரை தொடர்ந்து ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தில்லியில் திங்கள்கிழமை நடை பெற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமார் உடல்நிலை சரியில்லாததால் பங்கேற்க முடியவில்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.