states

வீட்டு வரி ‘சொத்து வரி’யாக மாற்றம்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மசோதாவில், ஆறாவது மாநில ஆணையம்,  “வீட்டு வரி” என்ற சொல், வீடுகளுக்கு மட்டுமே வரி விதிக்கப் படும். மற்ற வகை கட்டிடங்களுக்கு அல்ல என்ற தவறான  கருத்து பதிவை ஏற்படுத்துகிறது. இதனால், 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் ‘வீட்டு  வரி’என்பதை “சொத்து வரி” என மாற்றம் செய்வதற்கு பரிந்துரை செய்துள்ளது. மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் சில பிரிவுகளை திருத்தம் செய்வது  என அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.