சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று தான் அரசியல் சாசனம் கூறுகிறது. ஆகம விதிகள், அரசியல் சாசனத்தை விட உயர்ந்தது அல்ல. இது அனைத்து மத நம்பிக்கை சார்ந்த விதிகளுக்கும் பொருந்தும்.
சென்னை, மார்ச் 12- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பி ஆளுநர் ஆர்.என்.ரவியின் தொடரும் அராஜகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கண்ட னம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு கூட்டம் மார்ச் 11 அன்று சென்னையில் மத்தியக்குழு உறுப்பி னர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தி யக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், பெ.சண் முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளை யாட்டின் பாதகமான விளைவுகளின் பின்னணி யில், அதனை ஒழுங்குபடுத்த ஆலோசனை கள் கோரி உருவாக்கப்பட்ட நீதிபதி கே.சந்துரு தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரை யின் அடிப்படையில், கடந்த ஆண்டு தமிழக அரசு மேற்கூறிய ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார். கடந்த அக்டோபர் மாதம் தமிழக சட்டப்பேர வையில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அவர் சில சந்தேகங்களை கேட்ட போது, நேரி லேயே சந்தித்து தெளிவான விளக்கமும் மாநில அரசின் தரப்பில் தரப்பட்டது. பல மாதங்கள் மசோதாவைக் கிடப்பில் போட்டு வைத்துவிட்டு, மார்ச் 6 அன்று அந்த சட்டத்தை இயற்ற தமி ழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரி வித்து, ஆளுநர் மசோதாவைத் திருப்பி அனுப்பி யிருக்கிறார்.
மாதக்கணக்கில் இந்த மசோதா குறித்து முடிவெடுக்காமல் வைத்திருந்த ஆளுநருக்கு இப்பொழுதுதான் தெரிகிறதா அந்த சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது. இது வன்மையான கண்டனத்திற்குரி யது. ஆன்லைன் ரம்மி சூதாட்டம் நடத்தும் நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சந்தித்ததும் அதற்கு பிறகு ஆளுநர் இம்மசோதாவை திருப்பி அனுப்பியதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பு கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து 44 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். தமிழக மக்களின் உயிரை விட ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களின் நலன் பெரிதா? அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்த ஆளுநர், அதே நோக்கத்துடன் கூடிய மசோதா வுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்க மறுப்பது, அது வும் நீண்ட கால தாமதத்துக்கு பிறகு திருப்பி அனுப்புவது, முற்றிலும் நியாயமற்றது, கண்ட னத்திற்குரியது. பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களின் செயல்பாட்டை முடக்குவதற்கான அரசியல் கருவியாக பல்வேறு மாநிலங்களில் ஆளு நர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரு கிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே தமிழக ஆளுநரின் இச்செயல்பாட்டை பார்க்க வேண்டும். தமிழக அரசு மீண்டும் சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப் பிட முடிவு செய்திருப்பது வரவேற்புக்குரியது. மேலும், இது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுபடுத்திட வேண்டும். தேசிய அளவில் இத்தகைய சட்டம் கொண்டுவர அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிய அரசை வற்புறுத்த வேண்டும்.
அர்ச்சகர்கள் நியமனம் ரத்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்
திருச்சி குமார வயலூர் முருகன் கோவி லில் இரண்டு அர்ச்சகர்களை (பிராமணர் அல்லாதோர்) தமிழக அரசு நியமனம் செய் ததை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறது. ஆகம விதிகளின்படி இவர்கள் பொருத்தமற்றவர்கள் என தீர்ப்பில் குறிப்பிடப்படுகிறது. பிராமணர் மட்டும்தான் அர்ச்சகர் ஆகலாம் என்கிற காலம் மலையேறிவிட்டது. எதுவும் எந்த சாதிக்கும் ஏகபோகமல்ல. அர்ச்சகராக செயல் பட தேவையான பயிற்சி, அறிவு, அரசு சான்றி தழ் இருந்தால் போதும். இது இறை நம்பிக்கை யாளர்களுக்கு எதிரானதல்ல. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று தான் அரசியல் சாசனம் கூறுகிறது. ஆகம விதி கள், அரசியல் சாசனத்தை விட உயர்ந்தது அல்ல. இது அனைத்து மத நம்பிக்கை சார்ந்த விதி களுக்கும் பொருந்தும். மனுவாத கோட்பாடுகளுக்குள்ளேயே சமூகத்தை அடைத்து வைக்க நினைக்கும் சங்கி களின் பிற்போக்கு கருத்தியல் பரவலானால், சமத்துவமும் சமூக சீர்திருத்தமும் பின்னுக் குத்தள்ளப்படும் ஆபத்து உண்டு என்ப தைத்தான் தீர்ப்பு பிரதிபலிக்கிறது. தமிழக அரசு மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.