states

கட்டுமான வாரிய கூட்ட முடிவுகளுக்கு அரசாணை வெளியிடுக!

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு போனஸ் கிடைக்குமா?

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் வாரிய 36 ஆவது கூட்டம் வாரிய தலைவர் .பொன்.குமார் தலைமையில் 05.07.2022 அன்று  நடைபெற்றது.  வாரிய கூட்டத்தில்  கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி  பண்டிகை போனஸ்  ரூ.5 ஆயிரம்  வழங்க வேண்டும் என வாரிய கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு முதலமைச்சர் ஒப்புதலுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுவரை எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலா ளர்கள் பங்குகொண்ட போராட்டமும் நடத்தப்பட்டது. இப்போரா ட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் பல ஆண்டுகளாக போனஸ் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கும்  தொழி லாளர் துறை அமைச்சருக்கும்  தொழிலாளர் துறை அனைத்து அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பி வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருக்கிறார்கள்   புதுச்சேரி மாநில அரசு மேலும்   கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக 3500 ரூபாயாக உயர்த்தி  வழங்கப்படும்  என  அறிவித்துள்ளது.  தமிழக கட்டுமான தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்காதது தமிழக அரசு தொழிலாளர்களின் கோபத் திற்கு ஆளாகியுள்ளது. எனவே நல வாரியத்தில் 4150 கோடி ரூபாய் நிதி உள்ள நிலையில். கட்டுமான தொழிலாளர் நல  வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 20 லட்சம் தொழி லாளர்களுக்கும் பண்டிகை கால போனசாக ரூ.5 ஆயிரம் வீதம் பண்டிகைக்கு முன்பாக வழங்குவதற்கு அரசாணை வெளியிட வேண்டும் என்று இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேள னத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

சென்னை,அக்.16- தமிழ்நாடு கட்டுமான 35,36 ஆவது  வாரியக் கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டு பரிந்துரை செய்யப்பட்ட முடிவு களுக்கு அரசாணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய  கட்டுமானத் தொழிலாளர் சம்மேள னம் மனு அனுப்பியுள்ளது. சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி.குமார் அனுப்பிய மனு வருமாறு:

14.12.2021 அன்று நடைபெற்ற 35 ஆவது வாரிய கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகளின் அடிப்படையிலும் 05.07.2022 அன்று நடைபெற்ற 36 ஆவது வாரிய கூட்ட முடிவுகளின் அடிப்படையிலும் கட்டுமானத் தொழி லாளர்கள் வாழ்வாதார நலன் கருதி பல்வேறு தீர்மானங்களின் மீது  விவாதித்து எடுக்கப்பட்ட முடிவு களை வாரியச் செயலாளர் வாயிலாக  தமிழக முதல்வருக்கும் தொழிலாளர் துறை அமைச்சருக்கும்  பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்வரும்  தொழிலாளர் துறை அமைச்சரும் 35 36 ஆவது வாரிய கூட்ட முடிவுகளில் பல்வேறு முடிவுகளை அரசாணையாக வெளி யிட்டு இருந்த போதிலும் தொழி லாளர்களின் வாழ்வாதாரம் கருதி மேலும் எடுக்கப்பட்ட முடிவுகளை அமலாக்கி அரசாணை வெளியிட வேண்டுமென இந்த மனுவின் மூலமாக கேட்டுக்கொள்கிறோம். புதுச்சேரி மாநில வாரியத்தில் வழங்குவது போல நலவாரிய பதிவு  பெற்ற தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை கால போனஸாக ரூ.5 ஆயிரம் பண்டிகை காலத்திற்கு முன்பாக வழங்க வேண்டும்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் உணவு பொருட்கள் வேஷ்டி சேலையுடன் கூடிய சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதை வேறு  காரணங்களை முன்வைத்து வழங்காமல் மறுப்பதை தவிர்த்து தொடர்ச்சியாக ஆண்டுதோறும் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறக்கூடிய தொழிலாளர் மரணமடைந்தால் இயற்கை மரண உதவித்தொகையாக ரூ.50 ஆயிரம்,  ஈமச்சடங்கு உதவி ரூ.5 ஆயிரம் வழங்கிட வழிவகை செய்திட வேண்டும்.  நலவாரியம் மூலம் வழங்கப்படும் விலையில்லா வீட்டு வசதி திட்டத்தை ஒன்றிய அரசின் வீட்டு வசதி திட்டத்துடன் இணைத்து தொழிலாளர்களுக்கு ரூ.8 லட்சம் கிடைக்க செய்வதுடன் கூட்டு  பட்டா பிரச்சனை 3 ஆண்டு தொடர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற முறைகளை தளர்த்தி எளிய முறையில் தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் மூலம் பயன் பெறும் வகையில் எளிமைப்படுத்திட வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த மனுவில் நகல், தொழிலாளர் துறை அமைச்சர், அரசு தலைமைச் செயலாளர், தொழிலாளர் துறை ஆணையர்,  கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர், வாரிய செய லாளர், அனைத்து மாவட்ட ஆட்சித்  தலைவர்கள், அனைத்து மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணை யர்கள் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆகி யோருக்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.