states

தேசத் துரோக சட்டம் குறித்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!

புதுதில்லி, செப். 12 - தேசத்துரோக சட்டம் 124-ஏ பிரிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு  எதிராக இருப்பதால், இதனை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தில் பல்வேறு வழக்குகள் தொடரப் பட்டன. ஒன்றிய - மாநில அரசுகள் இந்த சட்டத்தை தவறாகப் பயன் படுத்துவதாகவும் அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தன.  இவற்றை விசாரித்த உச்ச நீதி மன்றம், தேசத்துரோக சட்டப் பிரிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து கடந்தாண்டு அதிரடியாக உத்தரவிட்டது.  இதனிடையே, ஒன்றிய பாஜக அரசு புதிதாக கொண்டுவந்துள்ள ‘பாரதிய நியாய சன்ஹிதா’ எனப் படும் தண்டனைச் சட்ட மசோதாவில் வெளிப்படையாகப் பிரிவு 124ஹ இல்லை என்ற போதிலும், அதே போன்ற ஒரு சட்டத்தைப் பிரிவு 150-இல் கொண்டுள்ளது.  இந்த சட்டப்பிரிவு 150 ஆனது, ‘தேசத்துரோகம்’ என்ற வார்த்தை யைப் பயன்படுத்தவில்லையே தவிர, மற்றபடி இந்தியாவின் இறை யாண்மை, ஒற்றுமை மற்றும் ஒரு மைப்பாட்டுக்கு ஆபத்தை விளை விக்கும் செயல்களைக் குற்றமாக விவரிக்கிறது. இந்நிலையில், தேசத்துரோக சட்டம் 124-ஏ பிரிவுக்கு எதிரான முந்தைய மனுக்கள் செவ்வாயன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, புதிய சட்டம் நிலைக் குழு பரிசீலனையில் இருப்பதால், தேச துரோகச் சட்டம் குறித்த இந்த  வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஒன்றிய அர சுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப் பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமை யிலான உச்ச நீதிமன்ற அமர்வு,  தேசத்துரோக சட்டம் 124ஏ-வுக்கு எதிரான மனுக்களை 5 நீதிபதி களைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.