சிறுகதை எழுத்தாளரும், கவிஞரு மான தோழர்.நாகை ஆசைத்தம்பி யின் பத்தொன்பதாவது நூலாக வெளி வந்திருக்கிறது ‘கூமுட்ட’ சிறுகதைத் தொகுப்பு. இடதுசாரி சிந்தனையை தங்களுக்குள் வரித்துக் கொண்டிருக்கும் தோழர்களது படைப்புகள் பெரும்பாலும் பிரச்சாரங் களாகத்தான் இருக்கின்றன என்ற பொது வான கருத்து வாசகர்களிடம் இருக் கின்றன. சரிதான்..! ஆனால்,எனது கேள்வியெல்லாம் ஏன் பிரச்சாரங்களாக இருக்கக் கூடாது.? என்பது தான். உங்களுக்கு தெரிந்த உலக இலக்கியங்களில் எல்லாம் மனித குலத்தின் மேம்பாட்டிற்காக சிந்திக்கப்பட்டவை என்று எதையெல்லாம் எண்ணுகிறீரோ.. அதை யெல்லாம்தான் இடதுசாரி சிந்தனைகள் என்று சொல்கிறோம். கதையோ கவிதையோ, கட்டுரையோ.. எழுதும் முறைகளில் வெவ்வேறான உத்திகள் இருக்கலாம்.
அது உங்கள் வாசிப்பு அனுப வத்திற்கேற்ப பிடிக்கலாம் அல்லது பிடிக்கா மல் கூட போகலாம்.ஆனால் அந்தப் படைப் பின் மைய அச்சாக இருக்கின்ற கருவை, கருத்துகளை நீங்கள் புறந்தள்ளவே முடியாது.இந்த அணுகுமுறையோடுதான் நான் படைப்புகளை அணுகுகிறேன். தோழர் நாகை ஆசைத்தம்பியின் படைப்புகளும் அவ்வாறுதான்.பிரச்சாரங் களையும் கதைகளின் வாயிலாக நன்றாகவே கொண்டு செல்ல முடியும் என்ப தை, மிகவும் எளிய மொழியில் சிறுவர் களுக்கும் புரிகிற வகையில், தமிழ்படிக்கத் தெரிந்த அனைவருமே புரிந்து கொள்ளும் வகையில் தனது நூலைத் தந்திருக்கிறார். கூமுட்ட எனும் தலைப்பிலான கதை, ஒரு கிராமத்தில் மாதர் சங்கத்தை கட்ட மைக்கும் பணியில் ஈடுபடும் தோழரின் இடை விடாத செயல்பாடும்,சங்கத்தை கட்டமை ப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும், சங்கம் அமைப்பது என்ற தீர்வுதான் இறுதி வெற்றியயாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவதும்,அது ஏன் அவ்வளவு அவசியம் என்று வரலாற்றுப் பூர்வமான தரவுகளை எடுத்துரைப்பது..என செல்லும் கதை மிகவும் மனம்கவர்ந்தது. ஒரு மிகப்பெரிய வரலாற்று ஆய்வுகள், தரவுகளின் துணைகொண்டு எழுதப்படவேண்டிய நாவல் ஒன்றை அசால்ட்டாக ஒரு சிறுகதையில் தந்து போகி றார் ஆசைத்தம்பி. சபாஷ் தோழரே.! இதேபோல்தான் ஊர்க்காவல் தெய்வம், கேள்வியின் நாயகனே,வாட்ச்மேன் உட்பட இத்தொகுப்பிலுள்ள பதினேழு சிறுகதைகளும் இயல்பான நகைச்சுவை யோடும், இதயம் தைக்கும் உண்மைகளு மாக பதிகிறது.
படிக்கவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.காரணம், கதைப்போக்கில் அவர் சொல்லிச் செல்லும் வரிகளில் மிளிரும் உண்மை தான். ‘வாயாலே வடை சுடுபவன்’ என்றால் உங்களுக்கு யார் நினைவுக்கு வருவாரோ தெரியாது. ஆனால், ஆசைத்தம்பி எழுதிய வரிகளில் ஒரு கதாபாத்திரத்தின் அறிமுகம் இவ்வாறு தொடங்குகிறது. ‘‘நாகேந்திரன் என்றால் யாருக்கும் தெரியாது. தாடின்னு சொன்னாத்தான் தெரியும். அந்தளவுக்கு அவனது தாடி பேமஸ். அப்பப்போ டிரிம் பண்ணிக்குவான். அவனுக்கு பெரிசா வேலை ஒண்ணும் கிடையாது. வேளாங் கண்ணி கோவிலைச் சுற்றி, தனது சைக்கிளில் ஒரு டீ கேனை கட்டிக்கிட்டு சுத்துவான்’’. இப்படித் தொடங்கிப் போகும் கதையின் இடையில், ‘‘சைக்கிளுக்கு ரிம்மு மாத்தனும்னு ஒரு ஐந்தாண்டு திட்டம் போட்டான்.அதுவும் நிறைவேறலை. அப்பதான் அங்க பஞ்சாயத்து தேர்தல் வந்தது’’. என்று போகும் கதையில் பஞ்சாயத்து தேர்தலில் நடைபெறும் தில்லுமுல்லுகள்,வெற்றி தோல்விகளை நீங்கள் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கும் பொருத்திப் பார்த்துக் கொள்வதெனில் அது உங்கள் சுதந்திரம்..! தத்துவங்களை பெரிய பெரிய பைண்டிங் புத்தகங்கள் போட்டு விளக்கவே வேண்டியதில்லை. ஆசைத்தம்பியின் பாணியை கைக்கொண்டாலே போதும். எளிய வகையில் எளிய மக்களுக்கான தத்துவங்கள் போய்ச் சேரும். தோழர் ஆசைத்தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.!
நூல் : கூமுட்ட
சிறுகதை தொகுப்பு
ஆசிரியர் :
நாகை ஆசைத்தம்பி
வெளியீடு :
கவிக்குடில் கோவை
விலை : ரூ.150