states

தமிழ்நாடு மீன்வளப் பல்கலை.துணைவேந்தர், பதிவாளர் மீது நடவடிக்கை கோரி வழக்கு

மதுரை, ஜன. 6-  தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் “நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் துணைவேந்தர் பத்துக்கும் மேற்பட்ட சுயநிதி கல்லூரிகளை உருவாக்கி, அதில் புதிய பட்டப் படிப்புகளை இரண்டரை வருடங்க ளுக்குள் ஏற்படுத்தி உரிய அனுமதி இல்லாமல் செயல் படுத்தி வருகின்றனர். இதனால் தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகத்திற்கு வரக்கூடிய நிதிகளை திசை திருப்பும் வேலையிலும் ஈடுபடுகின்றனர். மேலும் சுயநிதிக்குழுவில் பணியாற்றுவதற்காக ஆசிரி யர்களை தேர்ந்தெடுப்பதற்கு விளம்பரம் செய்து தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக சட்டத்தை பின்பற்றா மல் உரிய தகுதி இல்லாத ஆசிரியர்களை நியமித்து வரு கின்றனர். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி  நடவடிக்கை எடுக்க உத்தரவிட  வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த மனு மீதான விசாரணை வெள்ளி யன்று  நீதிபதி தண்டபாணி முன்பு நடைபெற்றது. அப்போது  நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதார ரின் குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை செயலர்  புகாரை பரிசீலனை செய்து ஆறு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.