states

img

துப்புரவுப் பொறியியல் துறை

சென்னை, ஜூன் 8 - மலக்குழியில் மனிதர்களை இறக்குவதை தடுக்க, அண்ணா பல்கலைக் கழகத்தில் துப்புரவுப் பொறியியல் துறையை தொடங்கி, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கு விக்க வேண்டும் என்று ‘மனித  மாண்பு’ நிகழ்வில் வலியுறுத்தப் பட்டது. மலக்குழிகளை சுத்தம் செய்ய சென்னை ஐஐடி ‘ஹோமோ செப் என்ற எந்திரத்தை உருவாக்கி யுள்ளது. அதனை காட்சிப்படுத்தி, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவை ஒழிக்க வலி யுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி ‘மனித மாண்பு’ நிகழ்வை  புதனன்று (ஜூன் 7) சென்னையில் நடத்தியது.

உயர்கல்வியோடு...

இந்த நிகழ்வு குறித்து பேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், “மனிதக் கழிவு களை மனிதர்கள் அகற்றும் பணியின்  போது, கடந்த மே மாதத்தில் மட்டும்  சென்னை மற்றும் புறநகர்ப்பகுதி யில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நடைபெற்ற விஷ வாயு மரணங்களில் 20 விழுக்காடு தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. துப்புரவுப் பணி உலகம் முழுக்க  உயர் கல்வியோடு தொடர்புடைய தாக உள்ளது. ஆனால், இந்தியா வில் சாதியோடு இணைந்ததாக உள்ளது. ஆகவே, மனிதக்கழிவு களை அகற்ற புதிய கண்டுபிடிப்பு களை செய்யாமல் உள்ளனர். எனவே, ஐஐடி-களில், அண்ணா பல்கலைக் கழகத்தில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்க வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் தாமாகவே துப்புரவு பொறியியல் துறையை உருவாக்க  முடியும். அதற்கான முன்னெடுப்பு களை இணைந்து செய்வோம்” என்றார்.

சிந்தனை மாற்றம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி பேசுகையில், “மனித மலத்தை மனிதர்களே அகற்றுவதை ஒழிக்க அரசு கலந் துரையாடலை நடத்த வேண்டும். இயந்திரத்தை விற்பனை பொருளாக மாற்ற காட்சிப்படுத்தவில்லை. மலக்குழிக்குள் மனிதன் இறங்க வேண்டுமா? இயந்திரம் இறங்க வேண்டுமா? மலக்குழிக்குள் இறங்கு வது தீக்குழிக்குள் இறக்குவது போன்றதுதான்.  சாதியை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு சமத்துவம் பேசு வது அறிவுப்பூர்வமற்றது. மலக்குழி மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமை திமுக அரசுக்கு உள்ளது; ஏராளமான சமூக அவலங் களை சரி செய்ய வேண்டி உள்ளது.  இளந்தலைமுறையின் சிந்தனை களில் மாற்றம் கொண்டு வர வேண்டி  உள்ளது. மலக்குழி மரணங்களை தடுக்க சிறை செல்லும் போராட்டத் தையும் நடத்துவோம்” என்றார். மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா பேசுகை யில், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் துப்புரவுப் பொறியியல் துறையை உருவாக்குவதற்கான பணிகளில் இணைந்து கொள்வ தாக உறுதியளித்தார். விசிக பொதுச் செயலாளர் வன்னியரசு குறிப்பிடு கையில், மனித மலத்தை மனிதர்களே அகற்றுவதை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்றார்.

வெற்றி பெறுவோம்

நிகழ்வை நிறைவு செய்து பேசிய  முன்னணியின் கவுரவத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், “மனிதர்கள் மலக்குழியில் இறங்கக் கூடாது என்பதுதான் சட்டம். அதை தடுக்க இயந்திரம் தேவை. ஹோமோ செப் இயந்திரம் போன்ற இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வரும்போதுதான், மேலும்மேலும் நவீனப்படும். புதியபுதிய கண்டுபிடிப்புகள் உரு வாகும். இந்த முயற்சியில் வெற்றி பெறுவோம்” என்றார். “மலக்குழிகளை சுத்தம் செய்ய  ஐஐடி உருவாக்கியுள்ள ஹோமே செப் இயந்திரத்தை சோதித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும்போது உயிரிழப்பவர்களுக்கு விரைவாக  நீதி, நிவாரணம் கிடைக்க வேண்டும். இத்தகைய உயிரிழப்புகளை மலக் குழி மரணம் என வகைப்படுத்தி 2013 ஆம் ஆண்டு சட்டப்படி வழக்கு  பதிய வேண்டும்” என்பன உள்ளிட்ட  அம்சங்கள் இந்த நிகழ்வின் சார்பில் விடுக்கப்பட்ட கூட்டு வேண்டுகோ ளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மலக்குழி மரண உறுதிமொழியை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி வாசித்தார். நிகழ்வுக்கு முன்னணியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் வி.ஜானகிராமன் தலைமை தாங்கினார். முன்னணியின் தலைவர் டி.செல்லக்கண்ணு, இயக்குநர் தீபக், மருத்துவர் அனுரத்னா, பத்திரிகையாளர்கள் ெஜன்ராம், சாவித்திரி கண்ணன், வழக்கறிஞர் எஸ்.சரவணன், தமிழ்நாடு ஒடுக்கப் பட்டோர் வாழ்வுரிமை இயக்க செயலாளர் எஸ்.கே.சிவா,  பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, முன்னணி யின் மாவட்டச் செயலாளர்கள் கே.மணிகண்டன் (தென்சென்னை), எம்.ஆர்.மதியழகன் (மத்திய சென்னை) உள்ளிட்டோர் பேசி னர். மலக்குழியில் மரணமடைந்த வர்களின் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்து பேசினர்.