பாஜக ஆளும் குஜராத் மாநில ஆசிரியர் பணி நியமனத்தில் பிரம்மாண்ட ஊழல் அரங்கேறியுள்ளதாக அம்மாநில ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யுவராஜ்சிங் ஜடேஜா ஆடியோ மூலம் ஆதாரத்துடன் போட்டுடைத்துள்ளார். தாஹோத் மாவட்டத்தின் சஞ்சேலி பகுதி யில் சத்குரு சேவா டிரஸ்ட் ரனுஜாதம் அமைப்பி ற்கு சொந்தமாக விடுதியுடன் அரசு மானியத்து டன் இயங்கும் பள்ளி ஒன்று உள்ளது. இது பள்ளியா? இல்லை ஆசிரமமா? என்ற சந்தேகம் ஒருபக்கம் உள்ள நிலையில், சத்குரு சேவா டிரஸ்ட் பள்ளி சமூக அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அறி விப்பின்படி சுமார் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப் பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டது. இந்நிலையில், சத்குரு சேவா டிரஸ்ட்டின் ஆசிரியர் நியமனம் வெளிப்படைத் தன்மை இன்றி மறைமுகமாக நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் போராட்டம் நடைபெற்ற நிலையில், இதனை பாஜகவிற்கு ஆதரவான “கோடி மீடியா” ஊடகங்கள் வெளியிடாமல் மூடி மறைத்தன. இந்நிலையில், தற்போது ஆம் ஆத்மி கட்சியின் யுவராஜ் சிங் ஜடேஜா வெள்ளியன்று ஆடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார். ஆடியோ தகவலின்படி சத்குரு சேவா டிரஸ்ட் நடத்திய ஆசிரியர் பணி நியமனத்தில் சுமார் 45க்கும் மேற்பட்டோரிடம் லஞ்சம் வாங்கி பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்றும், தகுதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கூறியும், மிரட்டியும் 45க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களிடம் தலா ரூ.35 லட்சம் வரை கரந்து கோடிக்கணக்கில் பிரம்மாண்ட ஊழல் அரங்கேற்றப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சஞ்சேலி தாசில்தாரரிடம் யுவ ராஜ் சிங் ஜடேஜா புகார் அளித்துள்ளார்.
‘370 சட்டப்பிரிவு ரத்து குறித்து விமர்சிப்பது குற்றம் ஆகாது’
ஜம்மு–காஷ்மீருக்கு சிறப்பு அந்த ஸ்து வழங்கிய 370ஆவது சட்டப் பிரிவை மோடி அரசு கடந்த 2019 ஆகஸ்ட் 5 அன்று ரத்து செய்தது. மகா ராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரி யர் ஜாவித் அகமது,”370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட அதே நாளான ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு–காஷ்மீருக்கு கருப்பு தினம்” என்று வாட்ஸ் ஆப்பில் ஆசிரியர்கள், மாண வர்கள் அடங்கிய குழுவில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் சுதந்திரதினமான ஆகஸ்ட் 14 அன்று “பாகிஸ்தான் சுதந்திர தினம்” என வாழ்த்து குறுஞ்செய்தியையும் அதே வாட்ஸ் ஆப் குழு வில் அவர் அனுப்பி இருந்தார். இந்த பதிவுகள் சமூக ஒற்றுமையை சீர்குலைப் பதாக கூறி ஜாவித் அகமது மீது மகா ராஷ்டிரா போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய மும்பை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், உச்சநீதி மன்றத்தில் ஜாவித் அகமது மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வியாழ னன்று தீர்ப்பை வழங்கினர். அதில்,”ஜம்மு–காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்து விமர்சிக்க இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. கறுப்பு தினம் என்று குறிப்பிடப்பட்டு இருப்பது எதிர்ப்பு மற்றும் வேதனையின் வெளிப்பாடு ஆகும். ஒவ்வொரு விமர்சனத்திற்கும் வழக்கு தொடர்ந்தால் ஜனநாயகமே உயிரோடு இருக்காது. பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் மாறுபட்ட கருத்தையோ விமர்சனத்தையோ முன்வைப்பது குடி மக்களின் அடிப்படை உரிமை” என உச்சநீதி மன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.