கோயம்புத்தூர், பிப். 4- தேங்காய் எண்ணெய்யை நியா யவிலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் தமிழ்நாடு தென்னை விவசாய சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தென்னை விவசாய சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் கோவை மலுமிச்சம்பட்டி தியாகி கள் நினைவரங்கில் நடைபெற்றது. தென்னை விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன் தலைமை தாங்கினார். இதில், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் பங்கேற்று விவசா யிகளின் நிலைமை, விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனை குறித்து உரையாற்றினார். தென்னை விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் விஜயமுருகன், தென்னை விவசாய சங்கத்தின் நடவடிக்கை குறித்தும் ,தென்னை விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அறிக்கை முன்வைத்தார்.
இதனைத்தொடர்ந்து இக்கூட்டத்தில், கொப்பரையை மாநில அரசு கொள்முதல் செய்து, ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கொப்பரைக்கு ரூ.140 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். உரித்த தேங்காய் கிலோ ரூ.50 விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். தென்னை மரத்திற்கான பயிர் காப்பீடு தென்னை வளர்ச்சி வாரி யத்தின் சார்பில் வேகப்படுத்தவும், தேங்காய் எண்ணெய்யை நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். பள்ளிகளில் வழங்கும் சத்துணவிலும், மாண வர் விடுதிகளில் வழங்கும் உணவு களிலும் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த உத்தரவிட வேண்டும். தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை மீண்டும் கோய முத்தூரில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. மாநிலக்குழு கூட்டத்தில், மாநிலப் பொருளாளர் நாகேந்தி ரன், மாநிலத் துணை தலைவர் செல்வம், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, மாவட்டத் தலைவர் ஜி.ராஜா, தென்னை விவசாய சங்க கோவை மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.