மதுரை, நவ. 11- பட்டாசு விற்பனை வரியில் ஒரு சத வீதத்தை பட்டாசு தொழிலாளர் களுக்காக அரசு செலவு செய்தால் பட்டாசு தொழிலாளர்களையும் தொழி லையும் பாதுகாக்க முடியும் என்று விருதுநகர் மாவட்ட சிஐடியு பட்டாசு - தீப்பெட்டி தொழிலாளர் சங்கத் தலை வரும் சிஐடியு மாநில துணைத் தலை வருமான எம்.மகாலட்சுமி தெரி வித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் வியாழனன்று தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர். பலர் காய மடைந்தனர். இச்சம்பவம் பட்டாசு தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சி யையும் சோகத்தையும் ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சிஐடியு பட்டாசு-தீப்பெட்டி தொழிலாளர் சங்க விருதுநகர் மாவட்டத் தலைவர் மகாலட்சுமி வெள்ளியன்று கூறியதாவது: பட்டாசு ஆலையில் பட்டாசு தொழிலை பாதுகாப்புடன் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்பதையே இந்த விபத்து உணர்த்துகிறது. அழகு சிறை பட்டாசு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 15 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் வரை பட்டாசு ஆலை நிர்வாகம் ஊதியம் வழங்குவதை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உறுதிப்படுத்த வேண்டும்.
காய மடைந்த தொழிலாளர்களின் பாதிப்பை கண்டறிந்து அதற்கு ஏற்ப தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக பட்டாசு ஆலை நிர்வாகம் குரூப் இன்சூரன்ஸ் திட்ட த்தை அமல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் தொழிலாளர்களின் வாழ்நிலையை கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் குழுவாக இணை ப்பதற்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குரூப் இன்சூ ரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீ ட்டுத் தொகை வழங்க முடியும். இந்த ஆண்டு 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனையாகி யுள்ளது. தீபாவளிக்கு முதல் நாள் ரூ.4500 கோடியும் அதற்கு பின் நாட் களில் ரூ.1500 கோடியும் விற்பனை யாகியுள்ளது. இதில் ஒரு தொகை தமிழக அரசுக்கு வரியாக கிடைத்துள் ளது. இந்த வரிப்பணத்தில் தொழி லாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட கிடைப்பதில்லை. இதுபோன்று எதிர்பா ராத விபத்துக்களால் பாதிக்கப்படும் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு வரி வசூல் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் இதன்மூலம் பட்டாசு தொழி லையும் பட்டாசு தொழிலாளர்களையும் பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.