இராமேஸ்வரம், ஜூன் 22- நலவாரியச் செயல்பாட்டை மேம்படுத்த வலியுறுத்தியும் 35,36,37ஆவது வாரிய கூட்ட முடிவுகளை தமிழக அரசு அர சாணை வெளியிட்டு அம லாக்கக் கோரியும் செப்டம்பர் 13 அன்று சென்னையில் மாபெ ரும் கவன ஈர்ப்பு பேரணி- ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என்று சிஐ டியு கட்டுமானத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு கட்டுமான தொழிலா ளர் சங்கத்தின் (சிஐடியு) மாநி லக்குழு கூட்டம் ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் இராமேஸ்வ ரத்தில் நடைபெற்றது. இக்கூட்டதிற்கு மாநிலத் தலைவர் கே.பி.பெருமாள் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர். சிங்காரவேலு, மாநிலச்செய லாளர்கள் கே.தங்கமோகன், எம்.சிவாஜி, சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.குமார், மாநிலப் பொருளாளர் ரூபி உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர். கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. நல வாரிய செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும். நல வாரிய கூட்டங்களில் எடுக்கப் படுகிற முடிவுகளை அரசு அமல் படுத்த வேண்டும். பென்சன் வழங்கி வந்ததை ஆய்வு என்ற பெயரில் நிறுத்தி வைப்பதை கைவிட வேண்டும். 60 வயது முடிந்த நாளில் இருந்து கணக் கிட்டு பென்சன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி செப்டம்பர் 13 அன்று சென்னையில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், ஜூலை 18 அன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஒன்றிய கட்டிட கட்டுமான தொழி லாளர் சட்டத்தை இல்லாமல் செய்துவிட்டு நல வாரிய பணப் பலன்களை உத்தரவாதப் படுத்தாத ஒன்றிய அரசாங்கம் கொண்டு வந்துள்ள தொழிலா ளர் சட்ட தொகுப்புகளை கை விட வலியுறுத்தியும் மதவெறி நடவடிக்கைகளை எதிர்த்தும் போராட முடிவு செய்யப்பட் டது.