உலக ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி புனேயில் நடைபெற்றது. இதில் சின்னாளப்பட்டி ராஜன் விளையாட்டு அரங்க மாணவர் பிரதீப் கடைசி ஆட்டத்தில் கென்யாவுடன் விளையாடி இரண்டாவது பரிசையும், சுஷ்மிதா கென்யாவுடன் விளையாடி மூன்றாவது பரிசையும் வென்றனர். வெற்றிபெற்ற வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் விதமாக சின்னாளப்பட்டி பிரிவிலிருந்து திறந்த காரில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சியில் மாஸ்டர் பிரேம்நாத் ,தென்னிந்திய செயலாளர் சுப்பிரமணி மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.