ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான சண்டைக்கு மட்டுமின்றி, உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வு தரும் வகையில், சீனா 12 அம்ச முன்மொழிவுகளை அளித்திருக்கிறது.
1. அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் மதித்தல்,
2. பனிப்போர் மனப்பான்மையைக் கைவிடுதல்,
3. விரோதங்களுக்கு முற்றுப்புள்ளி,
4. அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குதல்,
5. மனிதாபிமான ரீதியில் மக்களின் நெருக்கடிகளைத் தீர்த்தல்,
6. பொதுமக்களையும், போர்க் கைதிகளையும் பாதுகாத்தல்,
7. அணுஉலைகளைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்,
8. அணுஆயுத மிரட்டல்களைக் குறைத்தல்,
9. உணவு தானிய ஏற்றுமதிக்கு வசதி ஏற்படுத்துதல்,
10. தன்னிச்சையான தடைகளை நிறுத்துதல்,
11. தொழில் மற்றும் விநியோகச் சங்கிலியை நிலையாக வைத்திருத்தல்,
12. நெருக்கடிக்குப் பிறகான மறுகட்டமைப்பை முன்னிறுத்துதல்.
பெய்ஜிங், மார்ச் 2- சண்டையிட்டுக் கொள்வதால் யாருக்கும் பலன் இல்லை. பேசித் தீர்த்துக் கொள்வதே சரியாகும். அதே வேளையில் பல்வேறு நாடுகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி, தனது நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலையும் சரியானதல்ல என்று சீனா சுட்டிக்காட்டியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நெருக்கடி தொடங்கி ஓராண்டு காலம் கடந்து விட்டது. இதுவரையில் இதற்குத் தீர்வு காணக்கூடிய வகை யில் எந்த நாடும் அல்லது ஐ.நா. சபை போன்ற அமைப்புகளோ பேச்சு வார்த்தைக்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. உக்ரைனுக்கு ஆயு தங்களை அனுப்பி போரை நீட்டிக்கவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முனைந்து நிற்கின்றன. ரஷ்யா மீது போடப்பட்ட தடைகள் அனைத்தும் அந்நாட்டை செயலிழக்கச் செய்யா மல், தடையை நடைமுறைப்படுத்தும் நாடுகளுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
ராணுவக் கூட்டணிகள் தீர்வல்ல
இந்நிலையில், சீனா அமைதிக் கான திட்டத்தை முன்வைத்திருக் கிறது. தனது திட்டத்தை வெளி யிட்டுள்ள சீனா, ‘‘தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வது என்ற பெயரில் பல நாடுகளின் நலன்களைப் பலி கொடுப்பது சரியானது இல்லை. அதேபோன்று ஒரு பகுதியின் பாது காப்பை ராணுவக் கூட்டணிகளை பலப்படுத்துவதாலோ அல்லது விரிவடையச் செய்வதாலோ உத்தர வாதப்படுத்த முடியாது. அத்தகைய ராணுவக் கூட்டணிகளால் அமைதி ஏற்பட்டு விடாது’’ என்று கூறியிருக்கிறது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப் பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் உள்ளிட்ட சர்வதேச சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நாடுகளின் இறை யாண்மை, விடுதலை மற்றும் பிராந்திய ஒற்றுமை ஆகியவற்றைத் தீவிரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சீனா, சர்வ தேச சமூகத்தில் பெரியதோ அல்லது சிறியதோ, பலமானதோ அல்லது பல வீனமானதோ, செல்வம் படைத்ததோ அல்லது ஏழையோ, எப்படி இருந்தா லும் அனைத்து நாடுகளும் சமமான தாகும் என்று கூறியிருக்கிறது.
போரால் பலனில்லை
போர் மற்றும் சச்சரவால் யாருக்கும் பலனில்லை. நடை முறை சாத்தியமான வகையில் பிரச்ச னைகளை அணுக வேண்டும். பதற்றங்களை அதிகமாக்காமல் இருக்கும் வகையில் நடந்து கொள்வ தோடு, இதை நோக்கி பயணம் செல்லும் வகையில் ரஷ்யாவையும், உக்ரைனையும் அனைத்து நாடுகளும் உற்சாகப்படுத்தி ஆதரிக்க வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தையே தீர்வைத் தரும் என்று சீனா தனது அமைதித் திட்டத்தில் வலியுறுத்தி யிருக்கிறது.
மக்களைப் பாதுகாத்தல்
அப்பாவி குடிமக்களைப் பாது காக்கும் பொறுப்பு இருதரப்புக்கும் உள்ளது. அவர்களுக்கான உதவி களை அரசியல்படுத்தாமல் இருப்பது அவசியமாகும். போர் நடக்கும் பகுதிகளில் உள்ள மக்களைப் பாது காப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல சிறப்புப் பாதைகள் உரு வாக்கப்பட வேண்டும். அப்பாவி குடி மக்களோடு, போரில் சிறைப்பிடிக்கப் பட்டிருக்கும் கைதிகளுக்கும் பாது காப்பு அவசியமாகும். ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு தரப்பையும் சேர்ந்தவர்களை அந்தந்த நாடு களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும் என்று சீனா முன்மொழிந்துள்ளது.
அணுஉலைப் பாதுகாப்பு
அனைத்து அணுஉலைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சீனா, அவற்றின் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோன்று, போரின்போது அணு ஆயுதப் பயன்பாடு கூடாது என்றும், அணுஆயுதப் போராக மாறிவிடக் கூடாது என்றும் சீனா எச்சரித்திருக் கிறது. உணவு தானிய ஏற்றுமதிக்கான உடன்பாட்டை முழுமையாக நடை முறைப்படுத்த வேண்டும். இந்த உடன்பாட்டில் ரஷ்யா, துருக்கி (துருக்கியே), உக்ரைன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.
தடைகளை நிறுத்துக!
தன்னிச்சையாகப் போடப்படும் தடைகள் நெருக்கடிகளைத் தீர்க்காது. புதிய பிரச்சனைகளையே அவை உரு வாக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் இல்லா மல் போடப்படும் அனைத்துத் தடை களையும் சீனா எதிர்க்கிறது. அத்தகைய தடைகள் உக்ரைன் நெருக்கடியை நீட்டிக்கவே உதவும். மக்களின் வாழ்நிலையை மேம்படுத்து வது குறித்தே யோசிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியிருக்கிறது. நெருக்கடி தீர்ந்த பிறகு, சிதைந்து போன மக்களின் வாழ்க்கையையும், கட்டுமானங்களையும் மறு கட்ட மைப்பு செய்வதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்று சீனா கோரி யிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றும், அமெரிக்க ராணுவக் கூட்ட ணியின் உறுப்பு நாடாகவும் இருக்கும் ஹங்கேரி இந்த அமைதித் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் போராட்டம்
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஊதியம் மற்றும் பணியிட நிலைமைகளில் மாற்றம் கோரி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.