states

கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தைகள் உயிரிழப்பு பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம்

தேனி, செப்.30- பண்ணைபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகள் நிகிதா ஸ்ரீ (7) மற்றும் கரியம்பட்டி ஜெகதீசன் மகள் சுபஸ்ரீ (6) இருவரும் பாவலர் தெருவில் உள்ள அரசு பொதுக் கழிப்பறை தொட்டியின் மேல் விளையாடிக் கொண்டிருந்தனர்.  அப்போது, தொட்டியின் மேல் மூடி வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் அட்டை உடைந்து இரண்டு குழந்தைகளும் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்தனர்.இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனைக்கு புறப்பட்டனர். ஆனால் நிகிதா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுபஸ்ரீயை உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.இதனால் பெற்றோர்களின் உறவினர்கள், கோம்பை - போடி நெடுஞ்சாலையில் பண்ணைப்புரம் பேருந்து நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  முறையாக பராமரிக்கப்படாத கழிப்பறை தொட்டி காரணமாகவே உயிரிழப்பு நடத்தாக குற்றம்சாட்டினர். அதைத்தொடர்ந்து பண்ணைப்புரம் பேரூராட்சி செயலாளர் முனுசாமி இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டார். 2 குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

;