அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, அக்.13- தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளை யாட்டுக்களுக்கு இளம் தலைமுறையினர் ,குழந்தைகள் அடிமையாகியுள்ளனர். ஆன்லைன் விளையாட்டுக்களால் குழந்தை கள் விளையாட்டு மைதானத்தையே மறந்து விட்டனர் என்று தெரிவித்துள்ள உயர்நீதி மன்ற மதுரை கிளை, இந்த ஆன்லைன் விளையாட்டுக்கள் கிடைப்பதைத் தடுப்ப தற்கான வழிமுறைகள் குறித்து ஒன்றிய, மாநில அரசுகளும், வழக்கறிஞர்களும் தரவுகளுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. விபிஎன் செயலியை முறைப்படுத்து வது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் ்கிளை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மது ரைக்கிளை பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “ ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒன்றில் மாண வர்கள் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாக இருந்தது தெரியவந்தது. 2020ஆம் ஆண்டு பாதுகாப்பு காரண மாக, நமது நாடு இளம் தலைமுறையின ரின் கைகளிலேயே உள்ளது. நாட்டின் முன் னேற்றத்திற்கு இளம் தலைமுறையினரின் உளவியல், உடல், பொருளாதாரம், சமூக அளவில் திறன் படைத்தவர்களாக இருப்பது அவசியம். ஆனால் அவற்றை வளர்த்துக் கொள்வதற்கு பதிலாக, இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவது, சமூக வலைதளங்களில் நேரங்களை செலவிடுவது போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றனர். ஆகவே இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக ளை தடுப்பதும் அவற்றிலிருந்து இளை ஞர்களை மீட்பதும் அவசியமான ஒன்று. இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டே, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இதனை பொதுநல வழக்காக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. விபிஎன் செயலி களை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட விளையாட்டுக்கள், செயலிகளை பதி விறக்கம் செய்வது தொடர்பாக வீடியோக் களை வெளியிடும் யூடியூப் சேனல்களை முறைப்படுத்த வேண்டும். தடை செய்யப் பட்ட விளையாட்டுகளை விளையாடக் கூடாது என்பது தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையி னரிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பாக வியாழனன்று நடைபெற்றது.அப்போது “பப்ஜி,ப்ரீ பயர் போன்ற தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாவது இளம் தலைமுறையினர் குழந்தைகளி டையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி களை மட்டுப்படுத்த இயலாது. ஆனால் இளையோர் அவற்றை சரியான முறையில் பயன்படுத்துவது உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். “பப்ஜி, ப்ரீ பயர் போன்ற விளையாட்டுக் களை இளைஞர்கள் விளையாடக் கூடாது என்பதில் தமிழக அரசும் உறுதியாக உள்ளது. தற்போது கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள் ளன” என்று தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. “ வழக்கறிஞர் சமுதாயம் உலகையே மாற்றும் ஆற்றல் பெற்றது. ஆகவே இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்கள் விப ரங்களைத் தாக்கல் செய்யலாம். தடை செய்யப்பட்ட விளையாட்டுக்கள் கிடைப்ப தைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஒன்றிய , மாநில அரசுகளும், வழக்கறி ஞர்களும் தரவுகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி கள் உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணை அக்டோபர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.