states

img

கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள்!

சென்னை, செப்.14- தமிழ்நாட்டில் அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத் தின் கீழ் 3 பெண்கள் அர்ச்ச கர் படிப்பு முடிந்துள்ள நிலையில், கரு சுமக்கும் பெண்களும் இனி கருவ றைக்குள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு  முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி பதவி ஏற்ற போது அனைத்துச் சாதியின ரும் அர்ச்சகர் ஆவதற்கு சட்டத் திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தார்.  அர்ச்சகர் பயிற்சி அளிப்ப தற்கு என்று 2007 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ் நாட்டில் 6 பகுதிகளில் அர்ச்ச கர் பயிற்சி நிறுவனங்கள் தமிழக அரசு நிறுவியது. இந்நிலையில், அர்ச்சகர்  பயிற்சி அளிக்கும் கல்லூரி களில் ரம்யா, கிருஷ்ண வேணி, ரஞ்சிதா ஆகிய மூன்று பேர் பயிற்சி முடித் துள்ளனர். அர்ச்சகர் பயிற்சி பெண்கள் முடிப்பது இதுவே முதல் முறை. இது தொடர்பாக முதல மைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- “பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண் வெளிக்கு சென்று வந்தா லும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோவில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்க ளுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது. ஆனால், இந்த நிலை இனி இல்லை. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றுவதில், கரு சுமக்கும் பெண்கள் இனிக் கருவறைக்குள்…”என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.