states

1700 வீடுகள் தீயில் எரிந்து நாசம் மணிப்பூர் வன்முறையில் பலி 60 ; காயமடைந்தோர் 231 பேர்!

இம்பால், மே 9 - மணிப்பூர் வன்முறையில் அப்பாவி பொதுமக்கள் 60 பேர் பலியாகியிருப்ப தாகவும், 231 பேர் படுகாயம் அடைந் திருப்பதாகவும் அம்மாநில பாஜக  முதல்வர் பைரன் சிங், அதிகாரப்பூர்வ மாக தெரிவித்துள்ளார். பட்டியல் வகுப்பிலிருக்கும் மெய்டெய் சமூகத்தினருக்கு, பழங்குடி அந்தஸ்து வழங்குவதாக பாஜக ஆசை காட்டி வந்தது. மணிப்பூரில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக இந்த வேலையைச் செய்தது. பின்னர் அதி காரத்திற்கு வந்ததும் மெய்டெய் சமூக மக்களை ஏமாற்றியது. ஆனால், இந்த  விவகாரத்தில் மெய்டெய் மக்கள் உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், இவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவது பற்றி விரைந்து முடி வெடுக்குமாறு உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 19 அன்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மெய்டெய் மக்களை பழங்குடி பிரிவில் சேர்க்கக் கூடாது என்று குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடி மக்கள் மாநிலம் முழுவதும் பேரணி நடத்தினர். பதிலுக்கு மெய்டெய் மக்க ளும் போட்டிப் பேரணி நடத்தினர். அப் போது இருதரப்பினரும் ஆயுதங்களு டன் மிகமோசமாக மோதிக்கொண்ட னர். இந்த வன்முறையில் வீடுகள், வாக னங்கள், கடைகள் தீயிட்டுக் கொளுத்தப் பட்டன. 3 நாட்கள் வரை நீடித்த  இந்த வன்முறையால் மணிப்பூர் ரத்தக் களறியானது.

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், கலவரக்காரர்களை கண்டதும் சுட  உத்தரவிடப்பட்டது. இதன்படி போலீஸ்  துப்பாக்கிச் சூட்டிலும் பலர் பலியாகி னர். மாநிலத்தில் அரசியலமைப்பு பிரிவு 355-ஐ அமல்படுத்தி சட்டம் - ஒழுங்கு விவகாரத்தை ஒன்றிய அரசு கையில் எடுத்தது. ஆயுதப்படைகளையும் குவித்தது.  தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் சூழலில், அம்மாநில முதல்வர் பைரன் சிங் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், மணிப் பூரில் அரங்கேறிய வன்முறையில் 60 பேர் உயிரிழந்ததாகவும், 231 பேர் காயமடைந்திருப்பதாகவும், 1,700 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்தார். பாதுகாப்பான இடங்களிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்ட வர்களை, அவர்களது சொந்த ஊர் களில் குடியமர்த்தும் பணிகள் தொடங் கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், உயிரிழந்தோரின் குடும்பத் திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படு காயமடைந்தோருக்கு 2 லட்சம் ரூபா யும், சிறிய காயமடைந்தோருக்கு 25  ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங் கப்படும். சேதமடைந்த வீடுகளுக்கு, அதிகாரிகளின் மதிப்பீட்டுக்குப் பிறகு 2 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும். வன்முறை யைத் தூண்டியவர்கள், தங்கள் பொறுப்புகளைச் செய்யாத அரசு ஊழி யர்கள் மீது, உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்துள் ளார்.