states

மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு

பட்ஜெட்டைக் கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் பல்லாயிரக்கணக்கான தெருமுனைக் கூட்டங்கள்

ஒன்றிய அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உழைக்கும் மக்கள் மீதான மேலும் ஒரு தாக்குதலாகவே அமைந்துள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஓரளவு உதவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாக வெட்டிச் சுருக்கியுள்ளது. மறுபுறத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. மோடி அரசு யாருடைய நலனுக்காக செயல்படுகிறது என்பதற்கு அண்மையில் வெளியான அதானி-மோடி கூட்டுக் கொள்ளை தொடர்பான ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை சிறந்த உதாரணமாகும்.

இந்தியாவில் விவசாயம், தொழில்துறை, வேலையின்மை, சுகாதாரம், வறுமை   போன்ற பிரச்சனைகளுக்கு இந்த பட்ஜெட்டில் எந்த தீர்வும் கூறப்படவில்லை. மாறாக, பெருமுதலாளிகளின் நலன்களை பாதுகாப்பதே பட்ஜெட்டின் நோக்கமாக உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் சீரழித்து வரும் மோடி அரசு இந்த பட்ஜெட்டிலும் அதற்கான வேலையையே மேலும் செய்துள்ளது. இந்த மக்கள் விரோத, தேச விரோத பட்ஜெட்டை கண்டித்து இந்திய மக்களை தட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2023 பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, வட்ட தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களையும், மார்ச் மாதத்தில் இரண்டு நாட்கள் பல்லாயிரக்கணக்கான இடங்களில் தெருமுனைக் கூட்டங்களையும் நடத்துவது என்றும் சிபிஎம் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. இப்போராட்டங்களில் கட்சி அணிகள் முழுவதும் பங்கேற்று வெற்றிகரமாக நடத்திட வேண்டுமாய் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

சென்னை,பிப்.21- மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் மாநில  உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடத்தப் படுகிறது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து பிப்ரவரி 27-28 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.  

இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள நரேந்திர மோடி அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு குழிபறிக்கும் வகை யில் மாநில உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிறது. இதை கண்டித்தும், மாநில உரிமைகளை வலியுறுத்தியும் மாபெரும் ‘மாநில உரிமைகள் பாதுகாப்பு’ மாநாட்டை சென்னையில் நடத்துவது என்றும், இந்த மாநாட்டிற்கு கேரள மாநிலத்தின் முதலமைச்சர்  பினராயி விஜயன், தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா  முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோரை அழைப்பது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

ஒன்றிய மோடி அரசு மாநில உரிமைகளின் மீது கொடூரமானத் தாக்குதலை தொடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வித்துறை மீதான மாநிலங்களின் உரிமைகளை முற்றாக பறிக்கிறது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு தர மறுக்கிறது. ஜிஎஸ்டி வரி உட்பட மாநிலங்களின் வரி வருவாயை அபகரித்துக் கொண்டு வருகிறது. இயற்கை பேரிடர் நிவாரண நிதி உள்ளிட்ட மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான நிதியை கூட தர மறுக்கிறது. பொதுப்பட்டியலில் உள்ள அனைத்துத் துறைகளையும் கொஞ்சம், கொஞ்சமாக ஒன்றிய பட்டியலுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்தச் சட்டம், கொண்டு வர துடிக்கின்ற மின்சார திருத்தச் சட்டம் போன்றவைகளும் மாநில உரிமைகள் பறிப்பின் ஒரு பகுதியேயாகும். தமிழ்நாடு, கேரளா உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளின் செயல்பாட்டை சீர்குலைத்து வருகிறது.  

உதாரணமாக, தமிழ்நாடு சட்டப்பேரவை யால் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா, நீட் தேர்வு விலக்கு மசோதா உள்ளிட்ட 27 மசோதாக் களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.  ரவி ஒப்புதல் அளிக்காமல் அடம்பிடித்து வருகிறார். ஒன்றிய அரசினால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றுவதை விட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகவர்கள் போலவே செயல்படுகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில அரசினால் தயாரிக்கப்பட்ட உரையின் சில பகுதி களை தமிழ்நாடு ஆளுநர் படிக்க  மறுத் தது அப்பட்டமான அத்துமீற லாகும். மொழிவழி மாநிலங்கள் என்பதையே ஏற்காத பாஜக பரிவாரம் மாநிலங்கள் என்ற கட்டமைப்பையே சிதைக்க முயல்கிறது. மாநிலங்களின் உரிமை களை பறித்து ஒன்றியத்தின் அதிகார குவிப்பை நிகழ்த்தி வருகிறது. அரசியல் சாசன சட்டத்தின் 8வது அட்டவணையில் கூறப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை ஒன்றிய அலுவல் மொழிகளாக மாற்ற மறுக்கும் ஒன்றிய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பில் மூர்க்கத்தன மாக ஈடுபடுகிறது. இந்தியாவின் பன்முகத் தன்மையை மறுத்து “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல்” என்று ஒற்றைத் திணிப்பில் ஈடுபட்டுள்ள ஒன்றிய அரசின் அடாவடிகளை கண்டிக்கும் வகையிலும், மாநில உரிமைகளை வலி யுறுத்தியும் சென்னையில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்கும் வகையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு  மாநாட்டை நடத்துவது என்று சிபிஐ (எம்) மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. இம்மாநாட்டில் ஜனநாயக இயக்கங் கள், முற்போக்கு சக்திகள், பொது மக்கள் பேராதரவு தந்து பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென சிபிஎம் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.