states

img

அறநிலையத்துறை இணை ஆணையர்கள் பணியிட மாற்றம்

சென்னை, ஏப். 10 - இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்ப ட்டுள்ளனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலை யத்துறை செயலாளர் சந்திரமோகன் வெளி யிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: சென்னை அலுவலக திருப்பணி இணை ஆணையராக ெஜயராமனும், சென்னை அலுவலக தலைமையிட இணை ஆணை யராக சுதர்சனும், காஞ்சிபுரம் இணை ஆணை யராக வான்மதியும், வேலூர் இணை ஆணை யராக லட்சுமணனும், விழுப்புரம் இணை ஆணையராக சிவக்குமாரும் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். இதில், சென்னை அலுவலக திருப்பணி இணை ஆணையர் ஜெயராமன், சென்னை அலுவலக சரிபார்ப்பு இணை ஆணைய ராகவும் செயல்படுவார். சென்னை அலுவலக தலைமையிட இணை ஆணையர் சுதர்சன், சென்னை அலுவலக சட்ட இணை ஆணை யராகவும், வேலூர் இணை ஆணையர் லட்சு மணன் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் இணை ஆணையராகவும் செயல்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.