மத்திய ஏஜென்சிகள் பாஜகவின் கொத்தடிமைகளாகி விட்டன!
“எதிர்க்கட்சியில் இருக்கும் போது அவர்களுக்கும் இதே சிகிச்சை அளிக்கப்படும் என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும். லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை நள்ளிரவு வரை சோதனை செய்த னர். தேஜஸ்வி வீட்டில் சோதனை நடத்தியபோது, அவரது மனைவி ராஜஸ்ரீ நிறைமாத கர்ப்ப நிலை யில் இருந்தார். வீட்டில் குழந்தைகள் இருந்தனர். மத்திய அமைப்புகளை பயன்படுத்தி பாஜக அரசி யல் யுத்தத்தை நடத்துகிறது. மூடப்பட்ட வழக்குகள் திறக்கப்படுகின்றன. ஏஜென்சிகளிடம் ஸ்கிரிப்ட் ஒப்படைக்கப்படுகிறது. இது தேசிய கவலை கொண்ட பிரச்சனை. மத்திய ஏஜென்சிகள் கொத்தடிமை களாக மாற்றப்பட்டுள்ளன” என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் எம்.பி. மனோஜ் ஜா சாடியுள்ளார்.
இம்முறை உருளைக் கிழங்கே பாஜக அரசை மாற்றிவிடும்
“பாஜக ஆட்சியில் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பிரச்சனைகள் அதிகமாகி விட்டன. உருளைக் கிழங்கின் செலவினத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பு மறுபுறத்தில் குறைந்த விலை காரணமாக உற்பத்தி செலவை எடுப்பதே கடினமாகி இருக்கிறது. இரவு முழுவதையும் குளிர்பதன கிடங்குக்கு வெளியே கழித்தும் டோக்கன்களை பெறமுடிய வில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிக்கை பாஜக அரசாங்கத்தால் தொடர்ந்து நிராக ரிக்கப்படுகிறது. உருளைக்கிழங்கு இந்த முறை அரசாங்கத்தை மாற்றும்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார்.
2024 தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் ஜேடியு கூட்டணி
“2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சி கூட்டணி அமைக்கும் என்றால் அது சமாஜ்வாதி கட்சியுடன்தான் இருக்கும்” என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். “மக்கள வைத் தேர்தலுக்காக உத்தரப்பிரதேசத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. புதிதாக 5 லட்சம் உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். உத்தரப்பிர தேசத்தில் எங்கள் கட்சி கூட்டணி அமைத்தால், அது அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியுடன் மட்டும்தான் இருக்கும்” என்று ராஜீவ் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
போலந்து நாட்டுப் பெண்ணுக்கு 6 ஆண்டுகளாக வன்கொடுமை
மகாராஷ்டிரா மாநிலம் அம்போலியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சிஓஓ பதவியில் பணிபுரிந்து வருபவர் மணிஷ். இந்த நிறுவனத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 2016-இல் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த பெண்ணிடம் மணிஷ் நெருங்கி பழகி அவ ரது அந்தரங்க புகைப்படங்களை கைப்பற்றியுள்ளார். சுமார் 6 ஆண்டுகாலம் இவற்றை வைத்து மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமையில் மணிஷ் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கொடுமை தாளாத போலந்து பெண்மணி, தற்போது மணிஷ் மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித் துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மணீஷ் தலைமறைவாகி விட்டதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
காவிக் கொடியை ஏலம் எடுத்த பாஜக தலைவர்
கர்நாடக மாநிலத்தில் சித்ர துர்கா மாவட் டம் செல்லகெரே தாலுகாவில் நாயக்கன ஹட்டி என்கிற கிராமத்தில் திப்பேருத்ரசாமி கோவில் உள்ளது. இங்கு அண்மையில் தேரோட்டம் நடைபெற்றது. பொதுவாக, கோவில் தேரோட்டம் முடிந்ததும் தேரில் கட்டப்பட்டிருக்கும் பொருட்கள் ஏலம் விடு வது வழக்கம் . அந்த வகையில் தேரில் கட்டப் பட்டிருந்த காவி கொடி உள்ளிட்ட பொருட்க ளின் ஏலம் நடந்தது. இதில், பாஜக முன் னாள் அமைச்சர் சுதாகர் கலந்துகொண்டு, ரூ.55 லட்சம் ரூபாய்க்கு காவிக்கொடியை ஏலம் எடுத்துள்ளார்.
‘அனுமதிக்க முடியாது’
‘அரசமைப்புச் சட்டத்தின் 105-ஆவது பிரிவில் உறுதி செய்யப்பட்டுள்ள பேச்சுரி மையின் பெயரில், உறுப்பினர்களின் கட்டுப்பாடற்ற பேச்சுகளை அனுமதிக்க முடியாது’ என்று மாநிலங்களவைத் தலை வர் ஜகதீப் தன்கர் கூறியுள்ளார். ‘கட்டுப் பாடற்ற பேச்சுகள் மற்றும் குற்றச்சாட்டு களின் மூலம் மாநிலங்களவையை மல் யுத்த களமாக்க அனுமதிக்கமாட்டேன். அவையில் ஆதாரமற்ற, பொறுப்பற்ற கருத்துகளை உறுப்பினர்கள் தெரிவிக்கக் கூடாது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் இரட்டை தலைமை காலியாகிவிட்டதா? நீதிமன்றம் கேள்வி
சென்னை, மார்ச் 13- ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் அவர், சென்னையில் நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு சட்ட விரோதமானது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கி ணைப்பாளர் பதவி காலாவதி ஆக வில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு, நீதிபதி குமரேஷ் பாபு முன்பு திங்களன்று (மார்ச் 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க. இடைக் கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த மனுக்கள் காலாவதியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டதா? என்று கேள்வி எழுப்பி னார். இதற்கு மறுப்பு தெரிவித்த பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? என்பது குறித்து, நிலுவையில் உள்ள மனுவில் தான் முடிவெடுக்க முடியும் என இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்து உள்ளதாக கூறினார். மேலும், இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிபதி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து, விசாரணையை மார்ச் 27-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம்: பாமக நிழல் நிதி நிலைஅறிக்கை
விழுப்புரம், மார்ச் 13- பாமக சார்பில் அதன் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திங்களன்று (மார்ச் 13) விழுப்புரத்தில் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளி யிட்டனர். அதன் சிறப்பம்சங்கள் வருமாறு: மே 1ம் தேதியிலிருந்து மதுவிலக்கு தமிழ்நாட்டில் கொண்டுவரப்படும்; ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். என்எல்சி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படாது. இது தொடர்பான என்.எல்.சி.யின் கோரிக் கைகளை தமிழக அரசு ஏற்காது. பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப் படும்; தமிழ்நாடு போதையில்லா மாநில மாக மாற்றப்படும் தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகள் பழங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை குறைந்தபட்ச ஆதரவு விலையை தமிழ்நாடு அரசே நிர்ணயிக்கும். தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சிறு தானிய உணவகங்கள் அமைக்கப் படும். அவற்றில் சிறுதானிய உணவுப் பொருட்களுடன் சிறுதானியங்களும் விற்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் பின்னர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர் களிடம் பேசுகையில் “தமிழகத்தில் ஆளுநரே இல்லை.மாநில அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு ஆளுநர் கையெழுத்திடாமல் உள்ளார். கருணாநிதிக்கு அவரது நினை விடம் உள்ள இடத்திலேயே பேனா நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும். கடலில் சிலை அமைக்கக் கூடாது” என்று கூறினார்.
மீனவர்கள் 16 பேர் கைது : சிபிஐ கண்டனம்
சென்னை, மார்ச் 13- இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படை யினர், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப் பட்டினம் மீனவர்கள் 4 பேரை கைது செய்து அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என நரேந்திர மோடி வழங்கிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப் படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசின் முதன்மை திட்டங்கள் முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆய்வு
சென்னை, மார்ச் 13- தமிழகஅரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் முக்கியமான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து கடந்த மாதம் அவர் விரிவான ஆய்வு நடத்தினார். அதன் தொடர்ச்சியாக திங்களன்றும் (மார்ச் 13) தலைமைச் செயலகத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். இதில் தலைமைச் செயலாளர் இறை யன்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றனர். நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை களை சார்ந்த நடைமுறையில் உள்ள 68 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், 6 எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக பட்ஜெட்டில் அறி விக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும், மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்தும், சிறப்பு திட்ட செயலாக் கத்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவான ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளுக்கு பல் வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
காவல் துணை ஆணையர்களுக்கான அதிகாரம் செல்லாது : உயர்நீதிமன்றம்
சென்னை,மார்ச் 13- சென்னை, நன்னடத்தை பிரமாணத்தை மீறும் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர் குற்ற செயல்களில் ஈடுபடு வோர்களிடமிருந்து காவல்துறையினர் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டோம் என்று நன்னடத்தை பிரமாணம் என்பதை பெறக்கூடிய நடைமுறை உள்ளது. இந்த நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையில் அடைப்பதற்கு காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு 2013-14 ஆம் ஆண்டுகளில் இரண்டு அரசாணைகளை பிறப்பித்தது. இதன்படி நன்னடத்தை பிரமாணத்தை மீறியதாக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களை சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளில் இரு வேறு நீதிபதி கள் இரு வேறு விதமாக தீர்ப்பளித்ததனால் இது தொடர்பான சட்ட கேள்விக்கு விடை காண்பதற்காக நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த சிறப்பு அமர்வு நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையில் அடைக்க காவல் துணை ஆணை யர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட இரண்டு அரசாணைகளும் அரசியல் சாசனத்திற்கு விரோதமானவை என்று கூறியுள்ளது. மேலும் நீதித்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுடைய அதிகாரத்தை காவல்துறையினர் பயன்படுத்த முடியாது என்றும் அந்த அடிப்படையில் இந்த இரண்டு அரசாணைகளும் அமலுக்கு வருவதற்கு முன்பிருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் தங்களது உத்தரவில் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோருக்கு எதிராக குற்ற வியல் நீதிமன்றங்கள் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெளிவு படுத்தி உள்ளனர்.