மதுரை, ஜூன் 4- பாஜக ஒரு காக்காய்க் கூட்டம்; இரை போட்டால் காக்காய்கள் கூடத்தான் செய்யும். இரை தீர்ந்த பின் பறந்துவிடும் என மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் கே.ராஜூ கிண்டலடித்தார். தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது. ஆனால் ஏதோ ஒரு நூறு பேரை, ஆயிரம் பேரை கூட்டி ஒரு போராட்டத்தை நடத்துவதால் மட்டும் ஒரு கட்சி (பா.ஜ.க.) பிரதான எதிர்க்கட்சியாக மாறவும் முடியாது, வளரவும் முடியாது. எதிர்க்கட்சி என்ற நிலையை மக்கள் மத்தியில் பெறவேண்டும் என்றால் போராடினால் மட்டும் போதாது, கொள்கைகள் இருக்க வேண்டும். தமிழகத்தில் எல்லோரும் இந்தியை, சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலை ஒன்றிய அரசு சட்டரீதியாக மேற்கொள்ளும்போது, அதை மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள். இதற்கு உதாரணம் நீட் தேர்வு. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் இந்தத் தேர்வில், தமிழக மாணவர்கள் சிரமப்படு கிறார்கள். இதனால் வடமாநிலத்தவர்கள் தமிழகம் வந்து நீட் தேர்வுக்கு படித்து, அதில் வெற்றியும்பெற்று, தமிழக மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்க வழிவகை செய்து விட்டது மத்திய அரசு. இதை நாங்கள் வன்மையாக கண்டிக் கிறோம் என சி.பொன்னையன் கூறி இருந்தார். அதையடுத்து பாஜகவினர் சிலர் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை மதுரையில் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “பாஜக ஒரு காக்காய் கூட்டம்; இரை போட்டால் காக்காய்கள் கூடத்தான் செய்யும். இரை தீர்ந்த பின் பறந்துவிடும். அ.தி.மு.க.வை துரும்பு அளவு விமர்சித்தால் தூண் அள வுக்கு பதிலடி தருவோம். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தான் எதிர்க்கட்சி. யாருடனும் கூட்டணி இல்லை. தனித்தே போட்டி என சொல்ல அ.தி.மு.க. தயார். நாங்கள் காக்காய் கூட்டம் இல்லை கொள்கைக் கூட்டம். ஒரு கட்சி கூட்டத்திற்கு நூறுபேர், ஆயிரம் பேர், ஐந்தாயிரம் பேரை திரட்டுவதெல்லாம் மிகச் சாதாரணம். இதனால் ஒன்றும் ஆகப்போகவதில்லை என்று கூறினார்.
சமாளிக்கும் தலைவர்கள்
கடந்த இரு தினங்களாக அதிமுக தலைவர்கள் பாஜக-வை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் பா.ஜ.க. குறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர் பொன்னை யன் பேசியதை அவரது சொந்தக் கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அ.தி.மு.க இணை ஒருங்கி ணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சமாளிக்கிறார். செல்லூர் கே.ராஜூவின் பேட்டிகுறித்து பாஜக தலை வர் நாராயணன் கூறுகையில், “ பாஜக வளர்வதை பார்த்து அச்சப்படுகிறார்கள். செல்லூர் கே.ராஜூ போன்ற வர்கள், தொண்டர்கள் இழப்போம் என்று ஐயப்படுவதில் நியாயம் உள்ளது. அவர் அவ்வாறு பேசுவதில் வியப்பில்லை எனக் கூறி சமாளித்தார்.