கொச்சி, அக்.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான தோழர் வி.எஸ். அச்சுதானந்தனின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு ‘ஒரு சமர நூற்றாண்டு’ (ஒரு போராட்டத்தின் நூற்றாண்டு) என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட உள்ளது. கே.வி.சுதாகரன் எழுதிய இந்த வாழ்க்கை வரலாற்று நூலை சிந்தா பப்ளிஷர்ஸ் நவம்பர் 20 ஆம் தேதி வெளியிடுகிறது. தேச விடுதலையின் ஊடாகவும் ஜனநாயக உரிமைகளின் மூலமாகவும் பிரகாசமான பாதையில் கேரளம் நடந்துள்ளது. இந்த அனைத்து வரலாற்று நிகழ்வுகளுக்கும் வி.எஸ்.அச்சுதானந்தனின் வாழ்க்கை சாட்சியாகவும் உதவியாகவும் இருந்தது. அதைக் குறிக்கும் முயற்சியே இந்நூல் என்று நூல் ஆசிரியர் கே.வி.சுதாகரன் தெரிவித்துள்ளார். புத்தகத்தின் விலை ரூ.300 chinthapublishers@gmail.comஇல் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோழர் வி.எஸ்.அச்சுதானந்தனின் நூற்றாண்டு பிறந்த நாள் அக்டோபர் 20 அன்று கொண்டாடப்படுகிறது.