states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சிபிஐயிடம் மேலும்  9 வழக்குகள்?

மணிப்பூர் வன்முறை தொடர்  பாக இதுவரை 8 வழக்கு களை சிபிஐ பதிவு செய்துள் ளது. அவற்றில் 2 வழக்குகள் பெண்கள் மீதான பாலியல் தாக்குதலுடன் தொடர்பு டையவை. இந்நிலையில், வன்முறை தொடர்பாக மேலும் 9 வழக்குகளை விசா ரணைக்கு எடுத்துக்கொள்ளும் நட வடிக்கையில் சிபிஐ ஈடுபட்டுள்ளது.  ஏற்கெனவே 2 பாலியல் தாக்குதல் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்  கொண்டுள்ள சிபிஐ, மணிப்பூரின் சூர சந்த்புர் மாவட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் மற்றொரு பாலியல் தாக்கு தல் வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக்  கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மகளிர் உரிமைத்தொகை :  ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு

சென்னை, ஆக.14- மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் மகளிருக்கும் வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொது செயலாளர் அ.ராதிகா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:  தமிழ்நாடுத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் முதியோர் ஓய்வூதியம் மற்றும் இதர நலவாரிய அமைப்புகளில் உதவித்தொகை பெறக்கூடிய பெண்களையும் இத்திட்டத்தில் பயனாளிகளாக இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.  இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில் வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை பெறும் குடும்ப தலைவிகள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத் தலைவிகள், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் ஓய்வூதியத் திட்டம், உழவர் பாதுகாப்பு துறை ஓய்வூதியத் திட்டம் போன்ற திட்டங்களில் ஓய்வூதியம் பெறக்கூடிய பயனாளி களும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். இதனால் ஏராள மான பெண்கள் தமிழ்நாடுத்தில் பயன்பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.  தமிழ்நாடு மக்களின், பெண்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நிலைபாடு மிகச் சரியானது என ஜனநாயக மாதர் சங்கம் பாராட்டுகிறது.

கி.வீரமணி வேதனை

சென்னை, ஆக. 14 - நீட் தேர்வினால் சென்னை குரோம்பேட்டை யை சேர்ந்த மாணவன் ஜெக தீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாணவர் ஜெகதீஸ்வரன், தந்தை செல்வசேகர் வாழ் வை முடித்துள்ள சோகம் ஆளுநர் ரவி போன்றோ ருக்கு புரியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ‘நீட்’ தேர்வு ரத்துக்கு நான் கையெழுத்திட மாட்டேன் என்று தமிழ்நாடு ஆளுநர் ரவி நேற்று முன்தினம் சம் மன் இல்லாது ஆஜரானது போல் கூறியிருந்தார். இவ ருக்கு இல்லாத அதி காரத்தை, பொல்லாத எண்ணத்துடன் இப்படி உளறியுள்ளார். இந்த உயிர்ப் பலிகளுக்கு யார் பொறுப் பேற்பது? மனிதத்தை மதிக்காத ‘மனிதர்’களாக இப்படி மமதையுடன் பேசு வதனால் யாருக்கு என்ன பயன்? மகனையும், தந்தை யையும் இணைந்து குடும்பம் குடும்பமாக பலி கேட்கும் ‘நீட்’ தேர்வினால், இன்னும் எத்தனை எத்தனை உயிர்ப் பலிகள் ஏற்படுமோ? மாணவர்களே தற்கொலை எண்ணத்தைத் தவிர்த்து துணிவுடன் நிலைமையை எதிர் கொள்ளுங்கள்! மக்களே உணருங்கள் என்று  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது ட்விட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

விமான நிலையத்தில்  7 அடுக்கு பாதுகாப்பு

சென்னை, ஆக.14- நாட்டின் 77-வது சுதந்திர தின விழா  செவ்வாயன்று (ஆக.15) கோலாகல மாக கொண்டாடப்பட உள்ளது. இதை யொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரயில், பேருந்து நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் கடந்த 1 ஆம் தேதி முதலே பாதுகாப்பு  ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப் பட்டது. இந்த நிலையில் திங்களன்று (ஆக.14) அதிகாலையில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு 7 அடுக்காக அதிகரிக்கப் பட்டுள்ளது. இந்த கூடுதல் பாதுகாப்பு நடைமுறை 16 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று கூறப் படுகிறது. சென்னை விமான நிலைய பாது காப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டதோடு, பணி நேரம் 12 மணியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கூடுதலாக வர வழைக்கப்பட்டு, சோதனைகள் நடந்து வருகின்றன.

செந்தில் பாலாஜி சகோதரர் கைதா? அமலாக்கத்துறை மறுப்பு 

சென்னை, ஆக.14- அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப் பட்டு சிறையில் உள்ளார்.  இந்த வழக்கில் செந்தில்பாலாஜி யின் தம்பி அசோக்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அசோக் குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கொச்சியில் கைது செய்து விசாரணை நடத்துவதாக வெளியான தகவலுக்கு அமலாக்கத்துறை விளக்கம் அளித் துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- அசோக் குமார் கைது செய்யப்பட வில்லை. அவருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை. அசோக் குமாரின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் தாய்  லட்சுமி என இருவருக்கும் சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராக வில்லை. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 3 பேருக்கும் தொடர்பு இருப்ப தாக கருதியதால் சம்மன் அனுப்பப் பட்டது. கொச்சியில் அசோக்குமார் கைதானதாக வெளியான செய்தி தவறானது. இவ்வாறு அதில் கூறப்பட்டது.

தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் வளாகத்திற்கு மாற்ற ஊழியர்கள் கோரிக்கை

சென்னை, ஆக. 14- கடும் இட நெருக்கடியால் தலை மைச் செயலகத்தை ஓமந்தூரார் வளா கத்திற்கு இடம் மாற்ற வேண்டும் என  தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் சு.அரி சங்கர் ஆகியோர் முதலமைச்சருக்கு  அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப் பதாவது: தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி என்பது மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. தலைமைச் செயலக பழைய கட்டிடத்தில் பணி யாளர்கள் எளிதாக நடமாட முடியாத நிலை உள்ளது. தீ விபத்து ஏற்பட்டால், பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் உறுதித்தன்மை என்பது கேள்விக்குறி யாக உள்ளது. சில தளங்களில் மேற்புற பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுவது நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் வளாகத்தில் அமைத்தார். ஆனால், அவரது திட்டம் நடைமுறைப் படுத்தப்படவில்லை.   எனவே தலைமைச் செயலக பணியாளர்கள், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் நலன் கருதியும்,  பொதுமக்கள் தங்களது குறைகளை தீர்ப்பதற்காக தலைமைச் செயல கத்தை எளிதில் அணுகக்கூடிய வகையி லும் உடனடியாக தலைமைச் செயலக  வளாகத்தை அரசினர் தோட்ட வளாகத் தில் உள்ள ஓமந்தூரார் கட்டிடத்திற்கு இட மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.