states

பொருளாதார வளர்ச்சிக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்

தொழில் வர்த்தக சங்கம் எதிர்ப்பு

மதுரை,டிச.7- ரெப்போரேட் வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால்  தொழில் வணி கத்துறை மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களையும், தொழில் வணிக  முதலீட்டையும், பொதுமக்களையும் பொருளா தார வளர்ச்சிக்குப் பாதகமான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் விமர்சித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் டாக்டர் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

இந்த மாதம் நடைபெற்ற நிதிக்கொள்கைக் கூட்டத்தில், மத்திய ரிசர்வ் வங்கி 2022-2023  ஆம் நிதியாண்டில் 5-வது முறையாக ரெப்போ  வட்டி விகிதத்தை 5.90 சதவிகிதத்திலிருந்து 0.35 சதவிகிதம் உயர்த்தி 6.25 சதவிகிதமாக்கி யுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண் ணெய் விலை வெகுவாக குறைந்தும், ஜிடிபி விகி தத்தில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லா மல்,ஜிடிபி வளர்ச்சி அளவும் ஏற்கனவே நிர்ண யிக்கப்பட்டதை விட குறைக்கப்பட்டுள்ள நிலை யில் ரெப்போ வட்டி விகிதம் மட்டும் மீண்டும்,  மீண்டும் உயர்த்தப்பட்டு வருவது அதிர்ச்சி யளிக்கிறது. சர்வதேச சந்தைகளில் காணப்படும் அரசி யல் பதற்றங்கள், உலக வர்த்தக விநியோக பாதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய  ரூபாய் மதிப்பு சரிவால், வர்த்தகப் பற்றாக் குறை மிகவும் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சிக்கு மிகுந்த தடையாக உள்ளது; அத்துடன் பணவீக்க மும் நம் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து ரிசர்வ் வங்கியின் இலக்கினை விட கூடுதலாகவே இருந்து வருகின்றது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி அறிவிப்புக்குப் பின்பு சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் சரிவடைந்து சந்தை முத லீட்டாளர்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ள னர்.  சில்லறை பணவீக்க விகிதமானது கடந்த அக்டோபரில் 6.77 சதவிகிதமாகவும், செப்டம்ப ரில் 7.41 விகிதமாகவும் இருந்தது. உணவுப்  பொருட்கள் மீதான பணவீக்கமும் தொடர்ந்து  அதிகரித்து வருகின்றது. தற்போது பருவ நிலை மாற்றத்தால் ஏற்பட்ட மழையினால் விவ சாயப் பயிர்கள் மற்றும் அறுவடை பாதிப்பால் உற்பத்தி குறைந்து, விலையேற்றத்தினை தூண்டியுள்ளது. இது உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கத்தினை மேலும் அதிகப்படுத் தும்.

வீட்டுக் கடன் வாங்கியவர்களை அவதிக்குள்ளாக்கும் 

இதுவரை ஆர்பிஐ (RBI) அறிவித்த ரெப்போ  வட்டி விகித உயர்வை வங்கிகள் வாடிக்கையா ளரின் கடன் தொகை செலுத்த வேண்டிய காலக்  கெடுவை மட்டுமே உயர்த்தி வந்தது; ஆனால்  தற்போது உயர்த்தப்பட்ட வட்டி விகித உயர்வு மூலம் மாதந்தோறும் செலுத்த வேண்டிய இஎம்ஐ தொகை அதிகரித்து வீட்டுக் கடன்  வாங்கியவர்களை மிகவும் அவதிக்குள் ளாக்கும். ரெப்போ வட்டி விகித உயர்வால் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் மற்றும்  தங்க நகைக் கடன்களுக்கான வட்டி விகிதம்  அதிகரித்து, மாதந்தோறும் செலுத்த வேண்டிய தவணைத் தொகை மிகவும் கூடுதலாகும்; குறிப்  பாக ரியல் எஸ்டேட், கட்டுமானப் பணிகள் மற்றும் ஆட்டோமொபைல் துறை விற்பனை குறைந்து வெகுவாகப் பாதிக்கப்படும். ஏற்க னவே கடும் நிதிநெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு மீதான விலை உயர்வு, வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் அவ திப்படும் தொழில், வணிகத் துறையினர், குறிப்  பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை யினர், பொதுமக்கள் கூடுதல் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.  பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ ரேட் (Repo rate) விகிதம் உயர்த்தப்படு வதாக ரிசர்வ் வங்கி காரணம் கூறினாலும், இந்த  நடவடிக்கைகளின் காரணமாக, இதுவரை வங்கி கள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி அதிக ரித்து பணப்புழக்கம் வெகுவாகக் குறைந்து, தொழில், வணிகத்துறையினர் குறிப்பாக குறு,  சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரும்,  பொதுமக்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்துள்ளனரே தவிர விலைவாசியும், பணவீக்க மும் குறைந்ததாக எவ்வித ஆதாரமும் இல்லை  என்பது குறிப்பிடத்தக்கது. 

நம் நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வும், பொருளாதார வளர்ச்சி காணவும், தொழில்,  வணிகத் துறையில் முதலீட்டினை அதிகரித்தல்,  உற்பத்தித் திறனை அதிகரித்தல், இளைஞர் களுக்கு அதிகப்படியான வேலை வாய்ப்பை  உருவாக்குதல், விவசாயத் துறையில் புதிய  யுக்திகளைக் கையாண்டு வேளாண்மை உற்  பத்தியினை அதிகரிக்கச் செய்வதோடு, வேளாண் விளைபொருட்கள் சேதாரம் ஆகாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், கல்வி  மற்றும் ஹெல்த்கேர் துறையை மேம்படுத்து தல், உலகளாவிய போக்குகளைக் கண்கா ணித்து அதற்கேற்ப நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் அரசின் நிர்வாகத் திறமையை மேம்படுத்துதல் உள்ளிட்ட காரியங்களில் ஒன்றிய  அரசு முனைப்  புடன் செயல்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

தொழில் துறையில் பணப்புழக்கம் குறையும் 

உற்பத்திச் செலவு அதிகரிப்பினால் பெரும் பாலான தொழில் வணிக நிறுவனங்கள் ஏற்க னவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்  நிலையில் வங்கிகளுக்கான கடன் வட்டி விகி தத்தை மீண்டும் 0.35 சதவீதம் ரிசர்வ் வங்கி அதி கரித்திருப்பதின் காரணமாக, வங்கிகள் தொழில் துறையினருக்கு அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் வெகுவாக அதிகரிக்கும். இத னால் தொழில் துறையின் உற்பத்திச் செலவு அதி கரித்து பணப்புழக்கமும் குறையும். இதனால் உற்பத்திப் பொருட்களை வாங்குவது குறைந்து தொழில் வணிகத் துறையில் பிரச்சனைகள் மேலும் தீவிரமடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.