ஈரோடு, ஜன.29- மோட்டார் தொழிலாளர் களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் ஆறு மையங்களிலிருந்து பிரச்சார இயக்கம் நடத்த தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மே ளனம் (சிஐடியு ) அறிவித்துள்ளது. ஈரோடு டி.பி.முத்துசாமி நினை வகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சம்மேளன கூட்டத்திற்கு சம்மேளன தலைவர் ஆறுமுகநயினார் தலைமை வகித்தார். பொதுச் செய லாளர் குப்புசாமி, பொருளாளர் பார்த்தசாரதி, துணைத் தலைவர்கள் எஸ்.கே.தியாகராஜன், எ.பி.அன்பழகன், மூர்த்தி மற்றும் சிஐடியு மாநில செயலாளர் சிவாஜி உள்ளிட்டார் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசின் மோட்டார் வாகன திருத்த சட்டத்தினால் சிறிய குற்றங்களுக்குக் கூட அதிக மான அளவு தண்டத் தொகை வசூலிக்கப்படுகிறது. ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் பல்லா யிரக்கணக்கான ரூபாயை தொழி லாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது. இதனால், மோட்டார் வாகன தொழி லாளர்கள் தொழில் நடத்தவே பெரிய சிரமமாக உள்ளது. ஒன்றிய அரசாங்கம் எப்சியை தனியாருக் குத் தருவதாக முடிவு செய்து, 15 வருடங்களான வாகனங்களை காலாவதியாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுசம்பந்த மாக தமிழக அரசு எப்சி (பொறுத்தச் சான்று சோதனை மையம்) அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் நடத்த வேண்டும்.
மத்திய அரசு வண்டியை காலாவதியாக்க முடிவு செய்தால் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மானி யம் வழங்குவதோடு, குறைந்த வட்டியில் புதிய வாகனங்கள் வாங்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நிதி உதவி செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும். மாநில அரசு கால் டாக்சிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும். நலவாரியங்க ளில் அனைத்து தொழிலாளர்களை யும் பதிவு செய்ய வேண்டும். மெக் கானிக்குகள் நலவாரியத்தில் பதிவு செய்வதில் இடையூறு உள்ளது. இதை சரி செய்ய வேண்டும். நல வாரிய பலன்களை உயர்த்தி வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும். மோட்டார் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி பிப்ரவரி 15 முதல் 25 வரை 6 மையங்களிலிருந்து பிரச்சார இயக்கம் நடத்துவது. லாரி உரிமை யாளர் சங்கம், இருசக்கர வாகன பழுதுநீக்குவோர் சங்கம், ஓட்டுநர் பயிற்சியாளர் சங்கம் ஆகிய சங்கங்களுடன் கலந்து பேசி பிப்ர வரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் வேலை நிறுத்தத்தை நோக்கி செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.