முதலமைச்சர் நிதி ஒதுக்க வேண்டும்: பி.ஆர்.நடராஜன் எம்.பி., கோரிக்கை
“தமிழ்நாடு அரசு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. நல்லாறு அணை கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்க வேண்டும். கடந்த காலங்களிலும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் போன்றவற்றை ஆளும் அரசுகள் நிறைவேற்றுவதாக ஏற்றுக் கொண்டனர். அதேசமயம் இந்த கோரிக்கைகள் மீது மக்கள் கருத்து வலுப்பெறும் போது திட்டங் களை விரைந்து செயல்படுத்த முடியும். அந்த அடிப்படையில் பிஏபி விவ சாயிகளின் உணர்வுகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தினால் விவசாயிகளுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் குறித்து ஏற்கனவே, ஒன்றிய அரசிடமும் விபரங்கள் கொடுத்திருக்கிறோம். அடுத்து நடக்க இருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து வலியுறுத்துவோம்” என்று பி.ஆர்.நடராஜன் எம்.பி., கூறினார்.
திருப்பூர், ஜூன் 10 - பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் (பிஏபி) ஆனைமலை ஆறு நல்லாறு அணைகள் கட்ட வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் “நம்ம நல்லாறு” நடைபயணம் துவங்கியது. திருப்பூர் மற்றும் கோவை மாவட் டங்களைச் சேர்ந்த 4 லட்சம் ஏக்க ருக்கும் மேற்பட்ட விவசாய நிலப் பரப்புக்கு நீர்ப்பாசனம் வழங்குவது டன், பல லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கக் கூடியதாகவும் கடந்த 60 ஆண்டு காலமாக பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் செயல்பட்டு வரு கிறது. தற்போது போதுமான தண் ணீர் கிடைக்காத நிலையில் பாசன திட்டத்திற்கு உட்பட்ட விவசாயி களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது. நல்லாறு அணை கட்டுவதன் மூலம், பிஏபி திட்ட தொகுப்பு அணை களில் இருந்து 100 கிலோமீட்டர் தூரம் பயணித்து வரவேண்டிய தண்ணீர், சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் மட்டும் பயணித்து திருமூர்த்தி அணைக்கு வந்து சேரும். இதன் மூலம் கூடு தல் தண்ணீர், கூடுதல் நாட்கள் கிடைக் கும். எனவே நல்லாறு அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை பிஏபி விவசாயிகள் மத்தியில் நீண்ட கால மாக இருந்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல் வேறு அமைப்புகளும் இக் கோரிக் கையை வலியுறுத்தி பல கட்ட இயக் கங்கள் நடத்தியுள்ளனர்.
நடைபயணம்
இந்த நிலையில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில், ஜூன் 10 முதல் 12 வரை மூன்று நாட்கள் ‘நம்ம நல் லாறு’ நடைபயண இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சனியன்று காலை பல்லடம் அருகே அருள்புரத்தில் நடைபயணத் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் வை.பழனிச் சாமி தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இப்பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் பி.டில்லிபாபு, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விவசாயிகள் சங்கத்தின் திருப் பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணன் உள்பட பல்வேறு சகோதர அமைப்பு களை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்தி நடைபயணத்தை வழி அனுப்பி வைத் தனர். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன் தலைமையில் 50க்கும் மேற் பட்ட விவசாயிகள் செங்கொடியுடன் கோரிக்கை முழக்கம் எழுப்பியபடி அணிவகுத்துச் சென்றனர். சனி யன்று பல்லடம் மற்றும் பொங்கலூர் ஒன்றிய பகுதிகளில் இக்குழுவினர் நடைபயண பிரச்சாரம் மேற்கொண்ட னர். ஞாயிறு அன்று குண்டடம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட கிராமங்களிலும், மூன்றாம் நாள் குடிமங்கலம் மற்றும் உடுமலை ஒன்றியங்களுக்கு உட் பட்ட பகுதிகளிலும் நடைபயணம் செல்கின்றனர். திங்களன்று மாலை உடுமலை நகரில் நடைபயண நிறை வுப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளார்.