states

மணிப்பூர் கலவரத்திற்கு துணைபோகும் பாஜக ஜூன் 14 சென்னையில் ஆர்ப்பாட்டம்

மலைவாழ் மக்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை, ஜூன் 8- மணிப்பூர் மாநிலத்தில் அரசியல் அமைப்பு சானத்திற்கு விரோதமாக செயல்படுவதுடன் கலவரத்தை உருவாக்கி வரும் பாஜகவை கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஜூன் 14 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாநில பொதுச்  செயலாளர் இரா.சரவணன் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- மணிப்பூரில் உள்நாட்டு யுத்தம் என்று சொல்லத்தக்க அளவுக்கு பெரும்  கலவரம் நடத்தி 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அரசின் கணக்கெடுப் பின்படி 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம், உயர்நீதிமன்றமும், அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாஜகவும் தான். மக்களிடையே பகையை மூட்டி மோத விட்டு ரத்தம் குடிக்கும் ஓநாயாக அங்குள்ள ஆளுங்கட்சி செயல்படுகிறது. மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்மாநிலத்தில் வசிக்கும் ‘மெய்டெய்’ என்ற பிரிவு மக்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க அரசு பரிசீலிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார். இதுதான் பிரச்சனைக்கு அடிப்படை.  ஆனால், அந்தப் பிரிவு மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தகுதியானவர்கள் அல்ல. இதனால், அம்மாநிலத்தில் ஏற்கனவே பழங்குடியினர் பட்டியலிலுள்ள குக்கி, நாகா என்ற இருபிரிவி னர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

மெய்டெய் பிரிவினர் தான் மாநில மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 விழுக்காடு. ஆளும் பாஜக ஆதரவுடன் கலவரத்தீயை மூட்டி மாநிலமே பாதிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு சொந்தமான நிலங்களை அபகரிக்க வேண்டு மென்பது இக்கலவரத்திற்கு பின்னால் உள்ள திட்டமாகும். மணிப்பூர் அரசியல் சாசனத்தின் 6வது அட்டவணைக்கு உட்பட்ட பகுதி என்பதால் பழங்குடியினர் அல்லாதவர் பழங்குடியினர் நிலத்தை வாங்கினால் சட்டப்படி செல்லாது. எனவே, பழங்குடியினர் பட்டி யலில் சேர்ந்து நிலத்தை அபகரிக்க வேண்டும் அல்லது பழங்குடி மக்களை கலவரம் செய்து அப்புறப்படுத்திவிட்டு நிலத்தை  எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்றொன்று, அங்குள்ள பழங்குடியினர் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுகிறவர்கள் என்பதால் ஒன்றிய பாஜக அரசும், மணிப் பூரில் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ் குண்டர்களும் சேர்த்து பழங்குடி மக்களின் வீடுகள், நிலங்களை சேதப்படுத்தி 200க்கும் மேற்பட்டோர் தாக்கியுள்ளனர். மேலும், பழங்குடி மக்களுக்கு உதவிய ஒரே காரணத்திற்காக அங்குள்ள கிறித்துவர்கள் மற்றும் 300க்கும்  மேற்பட்ட தேவாலயங்களையும் சூரையாடி யுள்ளனர்.  மணிப்பூர் பிரச்சனையில் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படும் பாஜகவை கண்டித்து ஜூன் 14 அன்று காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்திருக் கிறார்கள்.