கர்நாடகா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வாங்கித் தருகிறேன் எனக் கூறி ரூ.7 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்துத்துவா பிரச்சாரகர்சைத்ரா குந்தாபுரா உள்ளிட்ட 4 பேரை கர்நாடகா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடகாவில் உடுப்பி உள்ளிட்ட பகுதியில் தீவிரமான இந்துத்துவா கருத்துகளை பேசி வருபவர் சைத்ரா குந்தாபுரா. இது தொடர்பாக அவர் மீது பல வழக்குகளும் உள்ளன. ஆர்எஸ் எஸ்-ஸின் மூத்த தலைவர் என்று தன்னைக் கூறிக் கொண்டு, மாநி லத்தையே வலம் வந்த இவர், கர் நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடு வதற்கு வாய்ப்பு வாங்கித் தருவ தாக பலரிடம் கோடிக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஒரு குற்றச்சாட்டில் அவர் தற் போது மாட்டிக் கொண்டுள்ளார். சைத்ரா குந்தாபுராவிடம் ஏமாந்து, ரூ. 7 கோடி பணத்தை பறிகொடுத்த பெங்களூரு தொழி லதிபரான கோவிந்த்பாபு பூஜாரி, சைத்ரா மீது தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படை யில் நடத்தப்பட்ட விசாரணையில், பைந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட வைக்கி றேன் என தவணை முறைகளில் ரூ. 7 கோடியை, கோவிந்த்பாபு பூஜாரியிடம், சைத்ரா மோசடி செய்தது உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து, சைத்ராவை யும், அவரது கூட்டாளிகள் 6 பேரை யும் கர்நாடக காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. மேலும் சிலருக்கு வலை வீசி யுள்ளது. இந்த வழக்கில் மடாதிபதி ஒருவரும் முக்கியக் கூட்டாளி எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சைத்ரா குந்தா பூர், சாம்ராஜ்பேட்டை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்டார். அப் போது செய்தியாளர்களிடம், “அந்த (காலு) மடாதிபதி மட்டும் சிக்கட்டும்.. ரூ. 7 கோடியை பங்கு போட்ட பாஜக தலைவர்கள் எத்தனை பேர் மாட்டுவார்கள் பாருங்கள்” என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார். இது கர்நாடக பாஜக தலைவர்களை கலக்கத் தில் ஆழ்த்தியுள்ளது.