நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பாஜகவினர் கூப்பாடு
மதுரை, ஜூன் 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனையும் அவதூறு செய்த பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை 15 நாட்கள் சிறையில் அடைக்க மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதி பதி ராம்சங்கரன் சனிக்கிழமை உத்தரவிட்டார். பாஜக-வின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா, கடந்த ஜூன் 7-ஆம் தேதி, “கம்யூனிஸ்ட் கவுன்சிலரால்- தூய்மைப் பணியாளரின் உயிர் பறிபோனது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கள்ள மவுனம் காக்கிறார்” என்ற பொய்ச் செய்தியை தனது டுவிட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பி யிருந்தார். இந்த அவதூறு டுவிட்டர் பதிவு குறித்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.ராதா, பகுதிக்குழுச் செய லாளர் ஏ. பாலு ஆகியோர் மதுரை மாநகர் காவல் துறை ஆணையாளரிடம் புகாரளித்தனர்.
அந்தப்புகாரில், “எஸ்.ஜி. சூர்யா டுவிட்டர் செய்தியை நானும் எங்களது கட்சித் தோழர்கள் பலரும் ஜூன் 10-ஆம் தேதி பார்த்தோம். அந்தச் செய்தியால் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒருவித பதற்றமும், அச்ச மும் ஏற்பட்டுள்ளது. மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே கிடையாது. விஸ்வநாத் என்ற கவுன்சிலரும் கிடையாது. அப்படி எந்தவொரு சம்பவமும் நடைபெறாதபோது சமூகப் பதற் றத்தை ஏற்படுத்தி சாதி மோதலைத் தூண்டும் விதமாக உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார் எஸ்.ஜி.சூர்யா. இப்படி தவறான செய்திகளைப் பரப்புவதோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மீதும் அவதூறுகளைப் பரப்பி வரும் சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகார் குறித்து, விசாரணை செய்த மதுரை குற்றப்பிரிவு காவல்துறையினர், எஸ்.ஜி. சூர்யா மீது, 153 (A), 505 (1) (B), 504, 505(1) (C), 66 (D) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்னை தியாகராய நகரிலுள்ள இல்லத்தில் வைத்து, அவரைக் கைது செய்தனர். பின்னர் அவரை, சனிக்கிழமை காலை சுமார் 10.30 மணியளவில் மதுரை மாவட்ட விரைவு நீதி மன்ற நீதிபதி ராம்சங்கரன் இல்லத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு தொடர்ந்து அரசு தரப்பு வழக்க றிஞரும், பாஜக வழக்கறிஞர்களும் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “அவதூறு பரப்பிய எஸ்.ஜி. சூர்யாவை 15 நாள் நீதி மன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்”. இதை யடுத்து எஸ்.ஜி. சூர்யா மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக நீதிபதி வீட்டின் முன்பு பாஜக-வினர் ஐம்பது பேர், காலை 10.30 மணி முதல் காத்தி ருந்தனர். பிற்பகல் 12.30 மணியளவில் எஸ்.ஜி. சூர்யாவுக்கு ஜாமீன் கிடைத்து விட்டதாக அவர்கள் அங்கும் வதந்தி பரப்பும் வேலையில் ஈடுபட்ட னர். அத்துடன், குரூப் குரூப்பாக நின்று செல்போ னில் படம் எடுத்து மகிழ்ந்தனர். கடைசியில் எஸ்.ஜி. சூர்யா சிறை செல்வது உறுதியான நிலையில் முகத்தை தொங்கப் போட்டவாறு அமைதியாகி னர். எஸ்.ஜி சூர்யா வேனில் ஏறியவுடன், ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டு யாராவது செய்தியாளர்கள் பேட்டி கேட்க மாட்டார்களா? என அங்குமிங்கும் பார்த்தார். அப்போது ஒரு ஊடக வியலாளர் தனது செல்போனை அவரிடம் நீட்டவே, சற்று ஆறுதலடைந்து அவரிடம் எதையோ கூறிவிட்டு கிளம்பினார்.
சாலைமறியல்
மற்றொரு புறத்தில் பாஜக-வினர், சில நிமி டங்கள் திமுக அரசுக்கு எதிராக கூப்பாடு போட்ட படி சாலையில் அமர்ந்தனர். அவர்களை கைது செய்ய உடனடியாக வேனை கொண்டு வருமாறு காவல்துறை அதிகாரி உத்தரவிட்ட நிலையில், அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு பின்பக்க வழியாக நகர்ந்தனர்.
பொய்யை, பீதியை பரப்புவதா ஒன்றிய அமைச்சர்களின் வேலை? நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி
பொய்யையும், அவதூறு பரப்புவதையுமே வேலையாக கொண்டிருந்த பாஜக மாநிலச் செய லாளர் எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்ட நிலை யில், அவருக்கு ஆதரவாக பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலை துவங்கி, வானதி சீனி வாசன் எம்எல்ஏ, ஒன்றிய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை பலரும் கொதித்து எழுந்தனர்.
அண்ணாமலை தனது சமூக வலை தளப் பக்கத்தில், “தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா இரவோடு இர வாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சமூகப் பிரச்சனைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டைவேட நிலைப்பாட்டினை விமர் சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள். விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க் கருத்துக்கள் கூறு பவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது” என்று கூப்பாடு போட்டார்.
“பாஜக-வின் தமிழ்நாடு மாநிலச் செயலா ளர் எஸ்.ஜி. சூர்யா தனது ஒரு சமூக ஊடக பதிவின் காரணமாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவர் கைது கண்டனத்திற் குரியது. மலக்குழி மரணங்களின் மீது, தமிழ் நாடு முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்கா மல் இருப்பதைப் பற்றி கேள்வி எழுப்பிய எஸ்.ஜி. சூர்யாவைத் தண்டிக்க முயற்சி எடுப்பது நியாயமா? தமிழ்நாடு முதல்வர் உடனடியாக சூர்யாவை விடுதலை செய்ய வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டின் இரட்டை வேட நிலைப்பாடு, அதுவும் முக்கியமான சமூகப் பிரச்சனையில், வெட்ட வெளிச்சமாகி உள் ளது. பாஜக தொண்டர்கள் அனைவரும் மனம் தளராமல் சட்ட ரீதியாக இதனை எதிர்த்து போராடுவோம்” என்று ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் பதிவிட்டார். அதேபோல, “ஸ்டாலின் (தமிழ்நாடு முதல்வர்) தனது பெயர் அசல் ஸ்டாலி னைப் (இரண்டாம் உலகப் போரில் பாசிச ஹிட்லரை வீழ்த்திய சோவியத் ஒன்றியத்தின் தலைவரை) போன்றது என்பதை நிரூபிக்கத் துடிக்கிறார், அங்கு (தமிழ்நாட்டில்) மக்க ளின் சுதந்திரம் மற்றும் அவர்களின் உரிமை கள் இனி ஒரு பொருட்டல்ல, அவர்களை சிறையில் அடைக்க அவர் விரும்புகிறார்” என்று ஒன்றிய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகரும் கண்டனம் தெரிவித்தார். இதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. டுவிட்டரி லேயே பதிலடி கொடுத்தார்.
“ஒரு பொய்யை உண்மையாக்க ஒன்றிய நிதியமைச்சர், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் என எல்லோரும் களம் இறங்கி உள்ளனர். மலக்குழி மரணங்களுக்கு எதிராக பிண வறைகள் முன்பும், காவல் நிலையங்களில் வழக்கு பதிவு கோரியும் தொடர்ந்து களம் காண்கிற அமைப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்ட இயந்திர பயன் பாட்டைக் கொண்டுவர என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டிய ஒன்றிய அரசின் முக்கியத் துறை அமைச்சர்கள் சமூக வலைத் தளத்தில் பொய்யை, பீதியை பரப்பு கிற ஒருவருக்காக இவ்வளவு அக்கறை எடுத்து, நேரம் செலவழித்து வக்காலத்து வாங்குவது உண்மைக்கும் இவர்களது அரசியல் நோக்கத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி உள்ளது என்பதையே காட்டு கிறது.
பிரச்சனை என்ன?
“மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணா டம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் நிகழ்ந்தது. கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் நிகழ்ந்தது. சு. வெங்கடேசன் எம்.பி. கள்ள மெளனம் காக்கிறார் என்பதுதான்..” - ஒரு நிதி அமைச்சருக்கு அப்படி ஒரு பேரூராட்சி மதுரை மாவட்டத்தில் இருக்கி றதா என்று கூட பார்த்து விட்டு கருத்துக் கூற முடியாதா? இன்னொருவர் தகவல் தொழில் நுட்ப அமைச்சர். அந்த இலாகாவை “பொய் மற்றும் அவதூறு தகவல் தொழில் நுட்ப அமைச்சர்” என்று மாற்றி விடலாமா? முழுவதும் வதந்தியால் உருவாக்கப் பட்டுள்ள இந்த செய்தியை சுற்றுக்கு விடு வது சமூகப் பதட்டத்தை உருவாக்கும் என்பது தான் பிரச்சனை. ஆகவே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி புகார் கொடுத்தது. இதில் வேடிக்கை என்னவெனில் கருத்து சுதந்திரம் பற்றி ஒன்றிய அமைச்சர்கள் பேசி இருப்பதுதான். உலகில் “ இணையதள முடக்கம்” செய்வதில் ஐந்து ஆண்டுகளாக முதல் இடத்தில் இந்தியாவை வைத்தி ருப்பவர்கள். கோவிந்த பன்சாரே, கவுரி லங்கேஷ் ஆகியோர் இரத்த வெள்ளத்தில் மிதந்த போதெல்லாம் கருத்து சுதந்திரம் பற்றி கவலைப் படாதவர்கள் ஒரு போலிச் செய்தி நபருக்கு ஆதரவாக வருவதுதான் நகை முரண்.
பொய் உங்கள் ஆயுதம்.
உண்மையே என்றும் எங்களின் கவசம்” என்று சு.வெங்கடேசன் கூறினார். இதையடுத்து, “மதிப்பிற்குரிய நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களே, எஸ்.ஜி. சூர்யா கைதானது ‘பொய்யா’? இல்லை கட்சி தொண்டர் சூர்யா வை, தமிழ்நாடு முதல்வர் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன் வைப்பது ‘பீதியை பரப்புவதா’? ஒரு சமூக பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காண நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். மக்க ளின் பிரச்சனைக்கு தீர்வு காண உழைப்பது நம் கடமை. இந்த உழைப்பிற்கு ஆயுதம் வேறில்லை. இதற்கு கவசம் தேவை யில்லை. இதுவே உண்மை” என்று நிர்மலா சீதாராமன், மீண்டும் டுவிட்டரில் பதி விட்டார். இதற்கு “மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே இல்லையே என்பதை தாண்டிச் செல்வது பொய்க்கு துணை போவதில்லையா.., பீதிக்கு உதவி செய்வ தில்லையா.. மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களே!” என்று பதில் கேள்வி எழுப் பிய சு. வெங்கடேசன், “ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது அபாண்ட பழி சுமத்துவதை நீங்கள் கண்டிக்க வேண்டாமா?” என்று கேட்டதுடன், “உண்மையை கடப்பதும் பொய்யின் மாறுவேடமே” என்று பதிலடி கொடுத்துள்ளார்.