புதுக்கோட்டை, பிப்.3- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் பிப்ரவரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 4-ஆம் தேதி (சனிக்கிழமை) புதுக்கோட்டை பால் பண்ணை ரவுண்டானாவில் இருந்து (லேணா திருமண மண்டபம் அருகில்) விவ சாயத் தொழிலாளர்களின் வாழ்வுரிமைப் பேரணி தொடங்குகிறது. இப்பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும், செம்படைப் போராளி களும் அணிவகுத்துச் செல்ல இருக்கின்ற னர். புதுக்கோட்டை நகரின் முக்கிய வீதி கள் வழியாக விண் அதிரும் கோரிக்கை முழக்கத்துடன் அணிவகுத்துவரும் பேரணி தடிகொண்ட அய்யனார் திடலை வந்தடை கிறது. தோழர் கோ.வீரையன் நினைவுத் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். தொடர்ந்து பிப்ரவரி 5, 6 தேதிகளில் புதுக்கோட்டை கற்பக விநாயகா மஹா லில் தோழர் ஜி.மணி நினைவரங்கில் பிரதிநிதி கள் மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் முழு வதும் இருந்து 650-க்கும் அதிகமான பிரதி நிதிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.