திருவள்ளூர், அக்.29- பீடித் தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் மானியத் தொகையை ரூ. 5 லட்ச மாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 30 அன்று தமிழ் நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தமிழ்நாடு பீடி தொழிலாளர் மாநில சம்மேளனம் முடிவு செய்து ள்ளது. தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளன கூட்டம் மாநிலத் தலை வர் எம்.டி.ராமச்சந்திரன் தலைமை யில் வெள்ளியன்று (அக் 28), திரு வள்ளூரில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் கே.திருச்செல் வன், பொருளாளர் எஸ்.பாப்பூ, மாநில துணை பொதுச்செயலாளர் நாகேந்தி ரன், மாநில துணைத் தலைவர்கள் டி.ஆர்.பலராமன், மகாவிஷ்ணு, திரு வள்ளூர் மாவட்டச் செயலாளர் எம்.கே.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் பாரம்பரியமான தொழில்களில் ஒன்றான பீடி தொழிலில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வரு கின்றனர். இதில் வீடற்ற தொழி லாளர்களுக்கு ஒன்றிய அரசு ரூ.3. லட்சம், மாநில அரசு ரூ.2 லட்சம் ஆக ரூ.5 லட்சத்திற்கு மானிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். வாடகை வீட்டில் வசிப்ப வர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும், தொழிலாளர்கள் குவிய லாக உள்ள பகுதிகளில் அரசு நிலத்தை ஒதுக்கி தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும், ஆன்லைன் பதிவு செய்ய தமிழ்நாடு கல்வித்துறை, பள்ளிக் கல்வி துறை உதவி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளனத்தின் 11 வது மாநில மாநாடு தென்காசி மாவட்டத்தில் 2023 மார்ச் மாதத்தில் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த தகவலை மாநிலத் தலைவர் எம்.பி. ராமச்சந்திரன் தெரிவித்தார்.