மதுரை,அக்.20- மதுரை மாநகராட்சி மக்களுக்கான பட்டா பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுதியோடு முன்னெடுக்கும் என்று மாவட்டச் செயலாளர்கள் அறி வித்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செய லாளர் மா. கணேசன், புறநகர் மாவட்ட செய லாளர் கே. இராஜேந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: “தமிழ்நாடு முழுவதும் குடிமனை பட்டாவுக்கான இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. நிலத்துக்கான கம்யூனிஸ்ட்டு களின் போராட்டம் அதன் கொள்கை வழிப் பட்டது.மக்களின் ஜீவாதாரமான போராட்டம். கண்ணியமான வாழ்க்கைக் கான போராட்டம். இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு நத்தம் புறம்போக்கில் பல பத்தாண்டு களாக வசித்து வருகின்ற எளிய மக்க ளுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும். 2011ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி யோடு இணைக்கப்பட்ட கிராம ஊராட்சிப் பகுதியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிக மானோருக்கு அரசு அனுமந்த பட்டா கொடுத்திருந்தது. அவர்களுக்கெல்லாம் தோராயப்பட்டா கொடுத்து கணினியில் பதி வேற்றம் செய்ய வேண்டும். குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்திற்கு உட்பட்ட வீடுகளுக்கு பய னாளிகள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்திய பின்பும் அவர்களின் பெயரில் பத்திரம் பதிந்து கொடுக்காத நிலை உள்ளது. மேற்கண்ட நிலையில் உள்ள மக்களுக்கு பட்டா மற்றும் பத்திரம் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா தந்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் - புறநகர் மாவட்டக்குழுக்களின் சார்பில் பல்லாயிரம் மக்கள் பட்டா கேட்டு முறையீடு இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. தலைமையில் 7.10.2024 அன்று நடைபெற்றது. முடிவில் மார்க்சிஸ்ட் கட்சித் தலை வர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மாநகராட்சி மக்களின் பட்டா பிரச்சனை குறித்த முறையீட்டை முன்வைத்தோம். அவர் தமிழக அரசின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்று உரிய தீர்வைக் காணுவதாக உறுதி யளித்துள்ளார்.
புறநகர் மக்களுக்கு பட்டா அளித்ததற்கு பாராட்டு
பின்னர் ஊடகங்களை சந்தித்த போது சு. வெங்கடேசன் எம்.பி., புறநகர் மக்க ளுக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டா அளித்ததை நினைவுகூர்ந்து மாநில அரசை யும், மாவட்ட நிர்வாகத்தையும் பாராட்டி னார். மாநகரில் பட்டா இல்லாத மக்களும் பயன் பெறும் வகையில் புதிய அரசாணை தேவைப்படுகிறது. அதற்காக இந்த முறை யீடு செய்யும் போராட்டத்தை நடத்து கிறோம், எனக் குறிப்பிட்டார். இது மார்க்சிஸ்ட் கட்சி முன் வைக்கும் கோரிக்கை. இதில் தற்பெருமை, விளம்பரம் என எதுவும் இல்லை. உண்மையில் மதுரை மாநகர் பகுதிக்குள் குடியிருக்கும் பட்டா இல்லாத மக்கள், குறிப்பாக பெண்கள் பெரும் திரளாக பங்கெடுத்தது, யாருடைய தனிப்பட்ட பெருமையையும் பறை சாற்று வதற்காக அல்ல. தங்களின் நியாயமான தேவையை முன் வைக்க, மார்க்சிஸ்ட் கட்சி யின் அறைகூவல் காரணமாக பங்கெடுத்த வர்கள் என்பதைமதுரை மக்கள் சரியாகவே புரிந்து கொண்டுள்ளனர். மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் பட்டா பல பத்தாண்டுகளாக வழங்கப்படவில்லை என்பது உண்மை. இத னால்தான் பல ஆயிரம் பேர் அன்றைய இயக்கத்தில் பட்டா கேட்டு மனு கொடுத்த னர். குடியிருக்க இடம் இல்லாதவர்கள், பல ஆண்டுகளாக நத்தம்புறம்போக்கில் குடி யிருந்தும் பட்டா கிடைக்காமல் தவிக்கின்ற னர். குடியிருக்க இடம் கேட்பதும் பட்டா கேட்பதும் குற்றமல்ல. உரிமை. அவர் களை அணிதிரட்டுவது எங்கள் கடமை. குடிமனைபட்டா இல்லாததே அதை கேட்பதற்கான ஒரு தகுதிதான். தொடர்ந்து பல பத்தாண்டுகளாக மக்கள் ஏமாற்றப் பட்டதால் தான் மக்களின் ஏமாற்றம் குமுற லாக, கோரிக்கையாக வெளிப்படுகிறது. பட்டா கிடைக்கும் என்று பல ஆண்டுக ளாக நம்பியவர்கள், விதிகளை காட்டி அதிகார பீடங்களால் அலைக்கழிக்கப்பட்ட வர்கள்தான் எங்களை நம்பி வருகிறார்கள்.அவர்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இல்லை. மதுரை மாவட்டத்திலும், தமிழ்நாட்டிலும் லட்சக் கணக்கானவர்களுக்கு எங்கள் போராட்டத் தால் பெற்றுத்தரப்பட்ட நிலமும், பட்டாவும் நிலைத்து நிற்கும் சாட்சியமாகும். ஒன்றிய அரசு மதுரை ரயில்வே மைதா னத்தை தனியாருக்கு விற்க முயன்றபோது கடந்த ஆண்டு அனைவரையும் திரட்டி அதை தடுத்திருப்பதும் மார்க்சிஸ்ட் கட்சி யின் போராட்டம் தான் என்பதை மதுரை மக்கள் அறிவார்கள். திசைதிருப்புவது எங்கள் நோக்கம் அல்ல. பல ஆண்டுகளாக பட்டா பெறு வதற்கான தகுதியும் உரிமையும் இருந்தும் திசை தெரியாமல் திகைத்து நிற்கும் மக்க ளை ஆற்றுப்படுத்தி,அணிதிரட்டுவதே எங்கள் கடந்த கால வரலாறு. நிகழ்கால திசைவழி. அந்த மக்கள் பணியை மார்க்சிஸ்ட் கட்சி உறுதியோடு முன்னெடுக்கும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.