states

img

நல்ல தாய்-தகப்பனுக்கு பிறந்தவர்கள் பெட்ரோல் விலை பற்றி கேட்காதீர்!

புதுதில்லி, ஏப்.2- பெட்ரோல் - டீசல் விலை உயர்வு பற்றி கேள்வி எழுப்பிய செய்தி யாளரை, கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவ் கடுமையான வார்த்தைகளால் வசைபாடிய சம்ப வம் நடந்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவை ஆதரித்து பாபா ராம் தேவ் பேசி வந்தார். அப்போது ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “எனக்குத் தெரிந்தவரை, பெட்ரோல் லிட்ட ருக்கு ரூ. 40-ஐ தாண்டக் கூடாது; அதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 300-ஐ தாண்டக் கூடாது. இதுதான் நான் அறிந்த பொருளாதாரம். இந்த விலை யை உறுதி செய்யும் அரசாங் கத்தைத்தான் நாம் ஆதரிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். ஆனால், அதே ராம்தேவ், 7 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹரி யானா மாநிலத்தில் தற்போது பேசி யுள்ளார். அதில், “பண வீக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. இந்த சமயத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களின் விலை குறைந்தால், தங்களின் வரி வருவாய் குறைந்து விடும் என அரசு கூறுகிறது. அப்படி நடந்தால் அரசால் எப்படி நாட்டை கொண்டு செல்ல முடியும்? எப்படி அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும்?

சாலைகளை எவ் வாறு அமைக்க முடியும்? பண வீக்கம் இருக்கும் வரை மக்கள் தான் கடுமையாக உழைக்க வேண்டும். பணம் ஈட்ட வேண்டும். துறவியான நானே அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை உழைக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த செய்தி யாளர் ஒருவர், பெட்ரோல், சமை யல் எரிவாயு விலை தொடர்பாக பாபா ராம்தேவ் 2014-ம் ஆண்டு தெரிவித்த கருத்து, இப்போது மாறி விட்டதே எப்படி? என்று கேள்வி யெழுப்பவே, ராம் தேவ் ஆத்திரம டைந்துள்ளார். “ஆமாம், நான் தான் அப்படி கூறினேன். உங்களால் என்ன செய்ய முடியும்? இதுபோன்ற கேள்விகளை கேட்காதீர்கள். நான் என்ன உங்களுக்கு ஒப்பந்தக்கா ரரா? நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க வேண்டுமா? வாயை மூடுங்கள். திரும்பவும் கேள்வி கேட்காதீர்கள். அது நல்லதல்ல. உங்களை பார்த்தால் நல்ல பெற்றோருக்குப் பிறந்ததை போல இருக்கிறீர்கள். இனி இதுபோல பேசாதீர்கள்” என்று பாய்ந்து பிடுங்கியுள்ளார்.