states

தீக்கதிர் விரைவு செய்திகள்

லித்தியம் எடுத்தால் தாக்குவோம்: ஒன்றிய அரசுக்கு மிரட்டல்

ஜம்மு - காஷ்மீரின் ரைசி மாவட்டத்திலுள்ள சலால்-ஹைமனா பகுதியில் 5.9 மில்லியன் டன்  லித்தியம் கனிமம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. லித்தியம் கனிமத்தை 100 சதவிகிதம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா தற்போது இருக்கும் நிலையில், லித்தியம் கண்டு பிடிப்பு, ஆட்சியாளர்களால் வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், “எந்த சூழ்நிலை யிலும் ஜம்மு-காஷ்மீரின் வளங்களை திருட, சுரண்ட விடமாட்டோம். இந்த வளங்கள் மக்க ளுக்கு சொந்தமானது. அது ஜம்மு - காஷ்மீர் மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். மோசமான இந்துத்துவ திருடர்கள் எங்கள் வழங்களை திருட அனுமதியில்லை. ஜம்மு - காஷ்மீ ருக்குள் நுழைய நினைக்கும் இந்திய நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். ஜம்மு-காஷ்மீர் மட்டுமின்றி இந்தியாவுக்குள்ளும் தாக்குதல் நடத்துவோம்” என்று  பாசிச எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பதிலளிக்க வேண்டியது மக்களுக்கே... ஆளுநருக்கு அல்ல!

“சிங்கப்பூர் ஆசிரியர் பயிற்சி கருத்தரங்குக்கு அரசுப் பள்ளி முதல்வர்கள் 36 பேர் அனுப்பி வைக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக தனக்கு புகார்கள் வந்திருப்பதாகவும், இதுதொடர்பாக 15 நாட்களுக்குள் தனக்கு விளக்கம் அளிக்காவிட்டால் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை, அம்மாநில ஆளு நர் பன்வாரி லால் புரோகித் மிரட்டியிருந்தார். இந்நிலையில், “நானும், தனது அரசும் 3 கோடி பஞ்சாபி  மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க கடமைப்பட்டவர்கள். ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட எந்த வொரு ஆளுநருக்கும் இல்லை” என்று முதல்வர் பகவந்த் மான் பதிலடி கொடுத்துள்ளார். மேலும்,  இதனையே தனது பதிலாக எடுத்துக் கொள்ளுமாறும் பகவந்த் மான் அதிரடி காட்டியுள்ளார்.

ஆசம் கான் மகன் அப்துல்லாவுக்கும் 2 ஆண்டுகள் சிறை!

உ.பி. மாநிலம் ராம்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சமாஜ்வாதி கட்சி சார்பில் 9 முறை வெற்றி பெற்ற செல்வாக்கு மிக்க தலைவர் ஆசம் கான் (74). இந்நிலையில், 2017-இல் ஆட்சிக்கு  வந்த பாஜக, ஆசம் கான் மீது நில அபகரிப்பு, ஊழல் 83 வழக்குகளை பதிவுசெய்தது. இதில்  அவருக்கு 27 மாதம் மற்றும் 3 ஆண்டுகள் இரண்டு வழக்குகளில் சிறைத்தண்டனை விதிக்கப்  பட்டது. இதன்மூலம் அவரது எம்எல்ஏ பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில், 15 ஆண்டு களுக்கு முந்தைய வழக்கு ஒன்றிலும் ஆசம் கான் மற்றும் அவரது மகன் அப்துல்லா ஆசம் ஆகியோ ருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆசம் கானின் மகனும் சுவார் தொகுதி எம்எல்ஏ பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலைகள்

சென்னை,பிப்.14- சென்னை ஐஐடி கல்வி நிறுவ னத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 மாணவர்களில் ஒருவர் மரணமடைந்தார். சென்னை ஐஐடியில் முதுநிலை ஆராய்ச்சி படித்து வரும் மாணவர் ஸ்டீபன் சன்னி. இவர் செவ்வாயன்று (பிப்.14) விடுதி அறையில் தூக்கில் தொங்கினார்.  அவரை உடனடியாக மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்த னர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும்  பலனின்றி ஸ்டீபன் உயிரிழந்தார். அதேபோல், மற்றொரு மாணவரும்  தற்கொலைக்கு முயற்சி செய்து உயி ருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறு கையில், “மரணமடைந்த மாணவரின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப் பட்டுள்ளது. கடிதம் ஒன்றும் கிடைத் துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது வரை பார்த்தால், தற்கொலை போல் தான் தெரிகிறது. மாணவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு விசாரணை நடத்தப்படும். ஐஐடி சார்பிலும் விசாரணை நடத்தப் படும்” என்று கூறினார்.

சென்னையில்  ரூ.5 கோடியில் பூங்கா

சென்னை,பிப்.14- ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின்  கீழ், ராயபுரம் மண்டலம், 53-வது  வார்டுக்குட்பட்ட பேசின் பாலம்  சாலையிலுள்ள பேசின் மேம்பாலத் தின் கீழ் 13,708 ச.மீ. பரப்பளவில் ரூ.5  கோடியில் புதிதாக பூங்கா அமைக்கும்  பணி நடைபெற்று வருகிறது. இந்தப்  பூங்காவில் நடைபாதை, முதியோர் பயன்படுத்தக்கூடிய பகுதி, மூத்த குடிமக்களுக்கான திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடம், திறந்த வெளி யோகா பகுதி, சிலைகள்  மற்றும் சுவரோவியங்கள், மழைநீர் சேமிப்பு அமைப்புகளுடன் கூடிய கட்ட மைப்பு, இருக்கை வசதிகள், மின்வசதி,  கழிப்பறை, இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தப் பகுதி வாழ் மக்கள்  வசதிக்காகவும், மறைந்த மூத்தோர்க ளின் நினைவாகவும் பிரத்யேகமாக மரக்கன்றுகள் நடுவதற்கான பகுதியும் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் சுமார் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டு மாநகராட்சி மூலம் இலவசமாக பராமரிக்கப்படும். இந்தப் பூங்கா பணியானது ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி 

சென்னை, பிப்.14- தமிழ்நாட்டில் 9 முதல் 14 வயது  வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை  வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை பள்ளிகள், அங்கன்வாடி மையங்க ளிலேயே வழங்குவதற்கான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதா ரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உலக அளவில் மார்பக புற்று நோய்க்கு அடுத்தபடியாக கர்ப்பப்பை  வாய் புற்றுநோய்க்குதான் பெண்கள்  அதிக அளவில் பாதிக்கப் படுகின்ற னர். உலக அளவில் அத்தகைய தாக்கத்துக்கு உள்ளாகும் பெண்களில் 25 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹெச்பி வி எனப்படும் தடுப்பூசியை முதல்  கட்டமாக தமிழ்நாடு அரசு செயல்படுத்த  ஆயத்த நிலையில் இருக்கிறது.   இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் 9 வயது முதல் 14  வயது வரை உள்ள பள்ளி மாணவி களின் விவரங்களை திரட்டி வருகிறோம். சம்பந்தப்பட்ட பள்ளி களிலும் இதுகுறித்த தகவல்களை கேட்டிருக்கிறோம். ஒன்றிய அரசு  சார்பில் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னர், அதனை முறையாக குளிர்ப்பதன முறையில் பாதுகாத்து பயனாளிகளுக்கு அவர்களது பள்ளிகள், அங்கன்வாடி மையங்களி லேயே வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  தற்போது இந்த திட்டம் ஆரம்ப  நிலையில் இருப்பதால் அதற்கான வழிகாட்டுதல்கள் இன்னமும் வெளி யிடப்படவில்லை. விரைவில் அது குறித்த விரிவான அறிவுறுத்தல்கள் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்படும். தடுப்பூசி திட்டங் களை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்து வதற்குத் தேவையான எண்ணிக்கை யில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அதானி குறித்து பேச மறுக்கிறார் மோடி: அழகிரி

சென்னை,பிப்.14- சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அதானி ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் ஊழல்  செய்துள்ளார். இதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் எஸ்பிஐ, எல்ஐசி  முன் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். ஆனால், இதுகுறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார். இந்திய ரயில்வேயில் 2030-ம் ஆண்டு வரை 39 திட்டங்களை அறிவித்துள்ளனர். அதில், தமிழ்நாட்டிற்கு ஒரு திட்டம்கூட இல்லை. குறிப்பாக, கூடுதலாக அந்தியோதயா ரயில்களை இயக்கும் திட்டம், விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கும் திட்டம் எதுவு மில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது அதிகாரத்தை தாண்டி தமிழ் நாட்டை விமர்சிக்கிறார். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றார்.

போலி பத்திரங்கள் குறித்து  பதிவாளரிடம் புகார் அளிக்கலாம்

சென்னை,பிப்.14- உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், போலியாக பதிவு செய்யப்பட்ட பத்தி ரத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட  பதிவாளரிடம் புகார் அளிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில்,  கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம்  ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட ஒன்பது பத்திரங்களை போலி யானவை என அறிவித்து, அவற்றை  ரத்து செய்யக் கோரி நடேசன் என்பவர் மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படை யில் இந்த ஆவணங்கள் உண்மை யானவை என ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும் படி ஹரிநாத் என்பவருக்கு, மாவட்ட  பதிவாளர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி ஹரிநாத் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி சுரேஷ்குமார் முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது  மனுதாரர் தரப்பில், “போலி ஆவணங்கள் எனக் கூறி அதை  ரத்து செய்யக் கோரி நடேசன் தாக்கல் செய்த வழக்கு உரிமையி யல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்தப் புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது” என வாதிடப்பட்டது. அப்போது அரசு தரப்பில், “ஆவணங்கள் மோசடியாக பதிவு  செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது. அந்த அடிப் படையில்தான், விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இதில் எந்த சட்ட விரோதமும் இல்லை”என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,“உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் மோசடி ஆவணங்கள் குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கும் உரிமையை பறிக்க முடியாது”என தெளிவுபடுத்தினார். மேலும், இந்த வழக்கில் மாவட்ட பதிவாளரின் நோட்டீசுக்கு  இரண்டு வாரங்களில் விளக்க மளிக்க வேண்டும் என மனுதாரருக்கு  உத்தரவிட்ட நீதிபதி, இரு தரப்பினரின் கருத்துகளை கேட்டு 12  வாரங்களில் புகார் மீது சட்டப்படி முடி வெடுக்க வேண்டும் என மாவட்ட பதிவாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

“நீதித்துறையை சீரழிக்காதே” இஸ்ரேலில் கடும் எதிர்ப்பு

டெல் அவிவ், பிப்.14- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவின் நீதித்துறை குறித்த புதிய திருத்தங்களுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதோடு, இஸ்ரேலின் பல்வேறு நகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அண்மையில் பிரதமராகப் பொறுப்பேற்ற நேதன்யாஹூ, நாட்டின் நீதித்துறையில் சில மாற்றங்களையும், உச்சநீதிமன்றத்தை பலவீனப்படுத்தும் வேலையையும் செய்ய முயன்று வருகிறார். ஆனால், இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. நாடாளுமன்றப் பகுதியில்  அனைத்து சாலைகளையும் போக்குவரத்தை ரத்து செய்யும் வகையில் காவல்துறை இழுத்து மூடியது. பெருந்திரளாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான ஏய்ர் லாபிட் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. விலை மதிப்புள்ள பல்வேறு விஷயங்களை இவர்கள் அழிக்க முயல்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். நேதன்யாஹூவின் தீவிர வலதுசாரி அமைச்சரவை, நாட்டின் நீதித்துறையைப் பலவீனப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது. இதற்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் அனைத்துத் தரப்பு மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.  டெல் அவிவில் நடைபெற்ற மற்றொரு ஊர்வலத்தின்போது அமைச்சர் ஒருவரின் இல்லத்தை முற்றுகையிட்டனர். அனைத்துப் போராட்டங்களும் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றன.