சென்னை, டிச. 31- அரசுத் துறை வாகனங்களை பராமரிப்பதற்கு பணிமனைகள் இல்லாத இடங்களில் தானியங்கி பணி மனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சனிக்கிழமை (டிச. 31) தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் 20 பணி மனைகள் மட்டுமே பல்வேறு மாவட்ட தலைமையிடங்களில் உள்ளன. அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசுத் துறை வாகனங்களை பழுது நீக்கும் பொருட்டு நீண்ட தூரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனை களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் கூடுதல் எரிபொருள் செலவு மற்றும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில், நட மாடும் பணிமனைகள் 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு தானியங்கி பணி மனைகள் இல்லாத கிருஷ்ணகிரி,
தேனி, கரூர், திருவள்ளூர், செங்கல் பட்டு, திருவண்ணாமலை, ராணிப் பேட்டை, திருப்பத்தூர், நாமக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அம்மா வட்டங்களில் உள்ள அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வ தற்காகவும், பராமரிப்பதற்காகவும் மதுரை, திண்டுக்கல், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஒவ்வொரு வாகனமும் ரூ.14,34,214 மதிப்பீட்டில் பெறப்பட்டு, ஒவ்வொரு வாகனத்திற்கும் ரூ.29,925 மதிப்பீட்டில் பழுது நீக்கம் செய்யத் தேவையான கருவிகள் வழங்கப்பட்டு, மொத்தம் 1 கோடியே 2 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஏழு அரசு நடமாடும் பணிமனைகளை தமிழ்நாடு முதலமைச்சர் சனிக்கிழமை (டிச. 31) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, எஸ்.எஸ்.சிவசங்கர், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறை யன்பு, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.