தில்லி ரூஸ் அவென்யூ பகுதியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை வரும் ஆகஸ்ட் 10 அன்றுக்குள் காலி செய்ய வேண்டும் என அக் கட்சிக்கு உச்சநீதிமன்றம் திங்களன்று காலக்கெடு வை நீட்டித்து உத்தரவிட்டது. தில்லியில் நீதித்துறை உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக தில்லி உயர் நீதிமன்றத்துக்கு, ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து வரும் ஜூன் 15 அன்றுக்குள் ஆம் ஆத்மி கட்சி தனது அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தர விட்டிருந்த நிலையில், தற்போது காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பின்னடைவை சந்தித்த நிலையில், அம்மாநிலத்தில் இருந்து 10 பேர் ஒன்றிய அமைச் சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக கூட்டணி கட்சியான மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் நீதிமன்ற காவல் ஜூன் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவை அவ சர வழக்காக விசாரிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் திரி ணாமுல் காங்கிரஸ் தொண்டர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இந்த கொலை சம்ப வத்தில் பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக திரிணா முல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஒன்றிய அரசு பதவியேற்பு விழா நடந்தபோது குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் சிறுத்தை உலவியதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.