தூத்துக்குடி, ஜன.29- தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 10 டன் நிலக்கரியை லாரியுடன் ஓட்டுநர் கடத்த முயன்ற சம்பவம் குறித்து காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் தனியார் நிறுவனம் மூலம் ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இந்த நிலக்கரியை எகிப்து நாட்டிற்கு கொண்டு செல்வதற்காக துறைமுகத்தின் 2ஆவது தளத்தில் இருந்து 7ஆவது தளத்திற்கு லாரி மூலம் கொண்டு செல்லும் பணி நடை பெற்றது. இந்நிலையில் வெள்ளியன்று இரவு 10 டன் நிலக்கரியுடன் லாரியை, ஓட்டுநர் கிரீன்கேட் வழியாக கடத்த முயன்றுள் ளார். துறைமுக நுழைவு வாயிலில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை யிட்டபோது லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுதொடர்பாக ஏற்று மதி நிறுவன உரிமையாளர் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த விஜய குமார் மகன் விஜய ஆனந்த (45) என்பவர் சனிக்கிழமை தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் தங்கராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான லாரி ஓட்டுநர் தூத்துக்குடி முத்தையாபுரம் அயன்கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சையா மகன் காத்திக் குமார் (26) என்பவ ரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடத்த முயன்ற நிலக்கரியின் மதிப்பு ரூ.2.45 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.