states

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக! பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அளித்திடுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, ஜன.23- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள் ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் பட்டி யலின மக்கள் வீடுகளுக்கு சென்ற (18.1. 2023 அன்று) சாதிய ஆதிக்க சக்தியை சேர்ந்  தவர்கள் மிக மோசமான தாக்குதலை நடத்தி யுள்ளனர்.  கைகளில் தடி, கம்புகளுடன் அந்த  பகுதிக்குள் புகுந்து குடிநீர்த் தொட்டி, குடி நீர்க் குழாய்கள், 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், சமையல் பாத்தி ரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள்  உள்ளிட்ட அனைத்தையும் சேதப்படுத்தி யுள்ளனர். இத்தகைய மோசமான தாக்கு தலால் பல லட்சக்கணக்கான மதிப்புள்ள  பொருட்கள் முற்றிலும் சேதமடைந்துள்  ளன. பட்டியலின மக்களின் குடியிருப்பு களில் புகுந்து கண்மூடித்தனமான தாக்கு தல் தொடுத்திருப்பது வன்மையான கண்ட னத்திற்குரியதாகும்.

இத்தாக்குதலில் முக்கிய அரசியல் பிர முகரான சீனிவாசன் என்பவர் தலைமை யில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ள தாக செய்திகள் கூறுகின்றன. அரசியல்  ஆதாயத்திற்காக இவ்வாறு பட்டியலின மக்களை தாக்கி சாதிய மோதலையும், பதற்றத்தையும் உருவாக்க முனைந் துள்ள அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து  நடவடிக்கை எடுப்பதுடன், அப்பகுதியின் அமைதியை பாதுகாக்க உரிய நடவடிக் கைகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் மேற்கொள்ள வேண்டும். இத்தாக்குதலை தொடர்ந்து பாதிக்கப் பட்ட அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் அளித்த  புகாரின் பேரில் வழக்கை பதிவு செய்துள்ள  காவல்துறை, தாக்குதலில் ஈடுபட்ட ஒரு சில ரின் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்தி ருப்பது மோசமான விளைவுகளையே உரு வாக்கும் என்பதை தமிழக அரசு கவ னத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். எனவே, மூங்கில்துறைப்பட்டு அம்பேத்  கர் நகர் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை தனது முழுமையான வெளிப் படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமெனவும்,  தாக்குதலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் உரிய பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வ நடவ டிக்கை எடுக்கப்படுவதை மாவட்ட நிர்வாக மும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டு மெனவும், தாக்குதலால் பாதிக்கப்பட்டு உட மைகளை இழந்துள்ள மக்களுக்கு சேதத்  திற்கு ஈடான உரிய இழப்பீட்டுத் தொகை யை உடனடியாக வழங்க முன்வர வேண்  டும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.