தமிழ் படிக்கத் தெரியாத ‘நாம் தமிழர்’ வேட்பாளர் உறுதிமொழி வாசிக்க மாவட்ட ஆட்சியர் உதவி
விருதுநகர் தொகுதியில் நாம் தமி ழர் கட்சி சார்பில் கெளசிக் என்ப வர் போட்டி யிடுகிறார். அவர் திங்கள ன்று தனது வேட்புமனுவை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசீலனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது உறுதி மொழி எடுத்துக் கொள்வது வழக்கம். இந்த உறுதிமொழியை தேர்தல் நடத் தும் அலுவலர் முதல் வார்த்தையை கூறிய உடன் மற்ற வார்த்தைகளை வேட் பாளர்கள் வாசித்து உறுதிமொழி ஏற் பார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கெளசிக்கிற்கு தமிழ் படிக்கத் தெரியவில்லை. இதனால் முழு உறுதி மொழியையும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் படிக்க, அதை அப்படியே கௌசிக் பின் தொடர்ந்துள்ளார். கட்சிப் பெயரை நாம் தமிழர் என்று வைத்துக் கொண்டு தமிழ் படிக்கத் தெரியாதவர் வேட்பாளராக உள்ளாரே என அங்கிருந்த பலரும் அப்போதே முணுமுணுத்துள்ளனர்.
பாஜக ஆட்சியில் அதானி, அம்பானி மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளனர்
‘பங்காளி’ கட்சித் தலைவர் வாக்குமூலம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக-வையோ பிரதமர் மோடி ஆட்சியையோ விமர்சிப்பதே இல்லை. இதனால், அதிமுக - பாஜக இடையே மறைமுகமாக ஒரு கள்ளக் கூட்டணி இருப்பதாகவே அனைத்து தரப்பினரும் நம்புகின்றனர். இதனால் பெயரளவுக்கு ஆங்காங்கே அதிமுகவின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் சிலர் பாஜக-வை விமர் பிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில்தான், திண்டிவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக முன்னணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் ஒன்றிய அரசை சாடி யுள்ளார். “நாட்டில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. பிரதமர் மோடி மூன்று வேளைக்கு ஆறு முறை ஆடை மாற்றி மகிழ்ச்சி யாக இருக்கிறார். அவரின் இரண்டு நண்பர்கள் அதானி யும், அம்பானியும் மகிழ்ச்சியாக உள்ளனர். ரூ. 400-க்கு இருந்த சிலிண்டர் ரூ. 1,200-க்கு உயர்ந்த தற்கும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமும் மோடிதான். காலியாக இருக்கும் 13 லட்சம் ஒன்றிய அரசு பணியிடங்களை இன்னும் நிரப்பவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 1,000 தமிழர்களுக்குகூட ஒன்றிய அரசுப் பணி வழங்கவில்லை. நெய்வேலியில் கடந்தாண்டு சேர்க்கப்பட்ட 1,000 பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழர் இல்லை. தமிழகம் வரும் போதெல்லாம் தமிழை தொன்மை மொழி என்று பேசுவார். திருக்குறளும் சொல்வார். ஆனால், அதே திருக்குறளை, மோடி தேசிய நூலாக ஏன், அறிவிக்கவில்லை. ஏனென்றால் எல்லாம் வாக்குக்கான நடிப்பு மற்றும் நாடகம்” என்று விமர்சித்துள்ளார்.
வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுமுறை தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
சென்னை, மார்ச் 26 - வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தனியார் நிறு வனங்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவுறுத்தியுள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செவ்வாயன்று (மார்ச் 26) சென்னை தலைமைச் செய லகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தினத்தில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும். இதுகுறித்து தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட தொழிலாளர் நல ஆணையத்திற்கு மாநிலத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருக்கிறது” என்றார். 100 விழுக்காடு “மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 விழுக் காடு வாக்களிக்க வேண்டும்” என்றும் “தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார். சட்டம் - ஒழுங்கு சிறப்பு! “ஏப்ரல் 19 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்ட மாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து ஏற்பாடு களும் செய்யப்பட்டுள்ளன. சட்டம் - ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக திகழ்கிறது” என்றும் தெரிவித்த சத்யபிரதா சாகு, “இந்த தேர்தலின் போது பணப்பட்டுவாடாவை தடுப்பதில் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
பாஜக கொடி கட்டிய காரில் ரூ.75,860 பறிமுதல்
திருச்சிராப்பள்ளி, மார்ச் 26- திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி சுங்கச்சாவடி அருகில் தேர் தல் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையில் போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது பாஜக கொடி கட்டிய காரை மறித்து சோதனை யிட்டபோது, வேடசந்தூர் தாலுகா இந் திரா காலனி பகுதியைச் சேர்ந்த ஜெக நாதன், மூணான்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் ஆகியோர் காரில் இருந்தனர். அவர்களிடம் உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 75 ஆயிரத்து 860 பணம் மற்றும் பிரதமர் மோடி உருவம் பதித்த கவர் இருந்தது. இதையடுத்து பணத்தை உடனடியாக பறி முதல் செய்த தேர்தல் பறக்கும் படை யினர் லால்குடி வட்டாட்சியர் அலுவல கத்தில், துணை வட்டாட்சியர் லோபோ, முதுநிலை வருவாய் ஆய்வாளர் அப் துல்காதர் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
ஓபிஎஸ் பெயரிலேயே 5 பேர் போட்டி
இராமநாதபுரம், மார்ச் 26- இராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் முன்னாள் முதல் வர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடு கிறார். இந்நிலையில், உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் என்ற பெய ரைக் கொண்ட மற்றொரு நபரும் திங்க ளன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனிடையே, செவ்வாயன்று தெற்கு காட்டூர் பகுதியைச் ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் என்பவர் உட்பட ஓ. பன்னீர் செல்வம் என்ற பெயரில் மேலும் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். எழுத்து வரிசைப்படி இந்த 5 பேரின் பெயர்களும் வாக்குப்பதிவு இயந்தி ரத்தில் அருகருகே இடம்பிடித்தால் தங்க ளுக்கான வாக்குகள் பிரியும் என்பதால் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.