‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ வெளி யான 175ஆம் ஆண்டு இது. நீங்கள் முதன் முறையாக அதை வாசித்த அனுபவத்தை நினைவுகூர முடியுமா? செயற்கை நுண்ணறி வின் (AI) அசாதாரணமான எழுச்சியும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பலவற்றில் அது தாக்கமும் செலுத்தி வரும் தற்போதைய காலகட்டத்தில், அந்த ‘அறிக்கையின் பொருத்தப்பாடு என்ன?”
நான் மிக இளவயதில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன்முறையாக வாசித் தேன்: மாணவப் பருவத்தின் அந்தக் காலகட்டத்தில் நாங்கள் மிகுந்த தீவிரத்துடன் இருந்தோம்; இதோ புரட்சி வந்துவிட்டது, அது மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும் என எல்லாரும் நம்பினோம். எனவே, அது மிகவும் ஊக்கமளிக்கும் ஆவணமாக இருந்தது. குறிப்பாக, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் ஒன்று கூடுவதற்கான சாத்தியத்தை அது அங்கீ கரித்தது உண்மையில் பெரிய விஷயமா கத் தோன்றியது. அந்த அடிப்படைப் பொது நலன் இப்போதும் நிலவவே செய்கிறது. வேலைக்குச் செல்பவர்கள், வேலை செய்ப வர்கள் என அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டு மல்லாமல், வேலை செய்யும் அனைவரும் — முறையாக அங்கீகரிக்கப்படாத, முறையான ஊதியம் பெறாத அனைவருமே - தொழிலா ளர்கள்தான் என்பதை வளர்ந்த பிறகே நான் உணர்ந்தேன்.
மிகச் சமீபத்தில் ‘அறிக்கையை மீண்டும் வாசித்தபோது, திகைத்துப் போனேன். முழுமையாக இல்லையென்றாலும், உற்பத்திச் செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தியிருக்கும் விளைவு கள் சார்ந்து கூர்மையாகப் பல இடங்களில் அதுகூறியிருப்பது இன்றைக்கும் பொருந்துகிறது. மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் காலத தில் உருவாகியிருக்காத உலகமயமாக்க லின் பிரச்சனைகளைப் பற்றி ‘அறிக்கை’ பேசுகிறது. ஒரு பண்பாட்டுக் கூறு இன்றைக்கு உலகம் முழுவதும் சென்றுவிடுகிறது. ‘ஃபிரெண்ட்ஸ்’ என்கிற அமெரிக்கத் தொலைக் காட்சித் தொடரை இணையத்தில் பார்த்து சீன மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்கி றார்கள்; இந்தியர்களோ கொரியப் பாடல் களைக் கொண்டாடித் திளைக்கிறார்கள். எல்லாமே சர்வதேசமயமாகிவிடுகிறது. ஒரு பண்பாடு, உலகம் முழுவதும் செல்வதற்கான சாத்தியங்களைக் கொண்டிருப்பதையும், நாம் என்ன உருவாக்குகிறோம், எப்படி உருவாக்குகிறோம் என்பதை அது தீர்மா னிப்பதையும் அந்த அறிக்கை எப்படிக் கற்பனை செய்து பார்த்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே இது இன்றைக்கும் பொருத்தப்பாடு உடையதாகிறது என்பதே இதிலிருந்து கிடைக்கும் செய்தி.
நன்றி: இந்து தமிழ் திசை ( பிப்.14-2022), பொருளியலாளர் ஜெயதி கோஷ் நேர்காணல் பகுதியிலிருந்து...