states

img

தரமற்ற மருந்துகளை கொள்முதல் செய்தவர்களை கைது செய்க

புதுச்சேரி, செப்.16- தரமற்ற மருந்துகளை கொள்முதல் செய்தவர்களை கைது செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் சனிக்கிழமை (செப்.16) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுச்சேரி அரசு மருத்துவ மனைகளில் தரமற்ற மருந்து கொள்முதல் செய்து  ஊழலில்  ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும்.  அதிகரித்து வரும்   டெங்கு காய்ச்சலில் இருந்து பாது காக்க வேண்டும். புதுச்சேரி நகரப் புறம், கிராமப்புறங்களில் உள்ள சுகாதார மையங்களில் போதிய உயிர்காக்கும் மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். மருத்துவமனைகளில் காலியாக உள்ள  மருத்துவர், செவிலியர்  காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி  போராட்டம் நடைபெற்றது. எல்லைப்பிள்ளை சாவடி ராஜீவ் காந்தி குழந்தைகள் மற்றும் பெண்கள் அரசு மருத்துவ மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி நகர கமிட்டி செயலாளர் மதி வாணன், உழவர்கரை நகர  செயலாளர் ராம்ஜி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார் கள். கோரிக்கைகளை வலி யுறுத்தி  மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் பேசி னார்கள். செயற்குழு உறுப்பினர் கள் ராமச்சந்திரன், சீனிவாசன்,  கலியமூர்த்தி, கொளஞ்சியப்பன், சத்தியா, மாநிலக் குழு உறுப் பினர்கள் சரவணன், ஆனந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக சுகாதாரத்துறையின் முறைகேடுகளை கண்டித்து  முழக்கம் எழுப்பினார்கள்.