மதுரை, ஜன.7- மூட்டா கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்க ளவைஉறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், “முற்போக்கு பண் பாட்டை மதுரை நகரில் வளர்த்தெ டுத்த பெருமை மூட்டாவிற்கே உள்ளது” மதுரையில் யார் உரிமை களுக்காக போராட்டம் நடத்தினாலும் அங்கு மூட்டா அமைப்பு இருக்கும். இன் றைய ஆட்சியாளர்களின் கொள்கை களால் நாம் மிகப்பெரிய சவால்களை யெல்லாம் முறியடிக்க வேண்டிய கட் டத்தில் உள்ளோம். ஒன்றிய அரசின் முதல் தாக்குதலுக்குள்ளாகியிருப்பது கல்வித்துறை தான். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி., தமிழ்நாடல்ல, தமிழகம் என்று பேசு கிறார். தமிழ்நாட்டில் வாடகை வீட்டில் தங்கியுள்ள ஆளுநர் தமிழ்நாடு அல்ல தமிழகம் என்கிறார். இந்தத் துணிச்சல் அவருக்கு எங்கிருந்து வந்தது. வாடகை வீட்டுக்காரர் மிகக் கவன மாகப் பேசவேண்டும். சங்க இலக்கி யம் கூறும் நிலப்பரப்பு முழுவதை யும் தமிழகம் என்றழைக்க ஆளுநர் தயாரா? தமிழகத்தில் அங்கன்வாடி யில் தொடங்கி உயர்கல்வி வரை கல்வி சீரழிக்கப்படுகிறது. அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் நிறை வேற்றப்படவில்லை. அவர்களுக்கு மிகக்குறைவான சம்பளமே வழங்கப் படுகிறது. சில மாநிலங்களில் அங் கன்வாடி ஊழியர்கள் குழந்தை களுக்கு உடல்நிலை சரியில்லை என் றால் கோவிலுக்கு சென்று கோவிலை சுத்தம் செய்து பூஜைகள் நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது அரசு. கேட்டால் குழந்தைகளின் உடல் நிலை அறிவு வளர்ச்சி மேம்படும் என் கின்றனர். கல்வியை எங்கே கொண்டு முடிச்சுபோடுகிறது பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல். கல்வியை சீர ழிப்பதன் ஒருபகுதி தான் கல்விச் சாலை களை ஆர்எஸ்எஸ் சாலைகளாக மாற்றுவது. உயர் கல்விக்கு இன்று பேராபத்து வந்துள்ளது. மாணவர்களுக்கு வழி காட்டும் இடத்தில் ஆசிரியர்கள் உள்ள னர். இந்தியாவிற்கு வழிகாட்டும் இடத்தில் தமிழகம் உள்ளது. ஆசிரி யர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து கல்வியைக் காக்க வேண்டுமென்றார்.