சென்னை,ஜூலை 21- குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பி எஸ்சி வெளியிட்டுள்ளது. மேலும் வெள்ளிக் கிழமை (ஜூலை 22) முதல் விண்ணப்பிக் கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப் பாணையை இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதிவரை விண்ணப்பங் களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும். இதன்பிறகு முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தின் அதிகாரப்பூர்வ இணையத் தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.