states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை  வேளாங்கண்ணி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், கொடியேற்ற நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் சாலைகளில் குவிந்ததால் பெசன்ட் நகர்  கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்தது.

பாமக 35-வது ஆண்டு விழா பொதுக் கூட்டத்தை கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது; விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் நடத்திக்கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கடலூரில்தான் கூட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளோம்; வேறு மாவட்டத்தில் நடத்த விருப்ப மில்லை; இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறை யீடு செய்வோம் என பாமக வழக்கறிஞர் பாலு தகவல் தெரிவித்துள்ளார்.

செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரி வாக்க திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்து வதை கைவிடக்கோரி, காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் விவசாயிகள், பொதுமக்கள் திரளாக மறியல் போராட்டம் நடத்தினர்.

கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து டெம்போ வேன் மீது மோதியதில் தந்தை,  மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலை யில், மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்தை மாண விகளை தள்ள வைத்த விவகாரத்தில் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை உத்தர விட்டுள்ளது.

பணியின் போது உயிரிழக்கும் ஊழி யர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆவணி மாத பவுர்ணமியையொட்டி வேலூர்  மண்டலத்தில் இருந்து திருவண்ணா மலைக்கு 130 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் உள்துறை விவகாரங்களுக்கான நிலைக்குழு உறுப்பினராக காங்கிரஸ் எம்பியும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரூ.35 கோடி சொத்து குவிப்பு வழக்கு முன்னாள்  அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மனைவியுடன் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரான நிலை யில், வழக்கு விசாரணை செப். 26க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.