சென்னை, அக். 11 - தமிழ்நாட்டில் பொறியியல் மாண வர்கள் என்றாலே கூடவே அண்ணா பல்கலைக்கழகமும் நினைவிற்கு வந்து விடும். ஏனெனில் மாநிலத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளை யும் இந்த பல்கலைக்கழகம் தான் நிர்வ கித்து வருகிறது. பாடத்திட்டம் உரு வாக்கம், தேர்வுகள், தேர்வு முடிவுகள், புதிய வழிகாட்டுதல்கள், பொறியியல் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி கள் என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக் கிறது. இந்நிலையில் மெகா ஆராய்ச்சி பூங்கா ஒன்றை கட்டமைக்கும் கனவை நிஜமாக்க உள்ளது. சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.2 லட்சம் சதுர அடியில் 3 தளங்களுடன் கட்ட மைக்கப்படுகிறது. பொறியியல் கல்வி கற்கும் மாணவர்கள் புதிதாக ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொடங்கலாம் என நினைப்பார்கள். அதை படிக்கும் போதே நிறைவேற்றிக் கொள்ள அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது. இதில் மாண வர்கள் மட்டுமின்றி விரிவுரையா ளர்கள், பேராசிரியர்களும் கை கோர்த்துச் செயல்பட முடியும். இது தவிர பெரு நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சிப் பூங்காவில் ஓர் அங்கமாக இடம்பெறலாம். இங்கிருந்தபடியே வேலைகளை செய்ய முடியும். அதா வது, புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம். இதன்மூலம் பொறியியல் மாண வர்களுக்கு நேரடி அனுபவம் கிடைப்பது மட்டுமின்றி, திறன் மேம்பாடு, எளிதில் வேலை கிடைப்ப தற்கான சூழல் போன்றவை உருவா கும். இத்தகைய வசதிகள் கொண்ட ஆராய்ச்சிப் பூங்கா அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கத் திட்டமிட ப்பட்டுள்ளது. இதை அண்ணா பல்கலைக்கழகத்தின் கேம்பஸ் கல்லூரிகள் என்று அழைக்கப்படும் பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர் மற்றும் பிளானிங், எம்ஐடி - மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறி யுள்ளதாவது:
ஆராய்ச்சிப் பூங்காவிற்கான வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு விட்டது. இதற்காக அண்ணா பல்கலை க்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள தேர்வுகள் கட்டுப்பாட்டு அலுவல கம் எதிரே உள்ள வெற்றிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். இந்த ஆராய்ச்சிப் பூங்காவில் லைஃப் சயி ன்ஸ் (Life Scidnces), பயோ-மெடிக்கல் இன்ஸ்ட்ருமெண்டேசன்(Bio-Medical Instrumentation), என்விரான் மெண்டல் சஸ்டெய்னபிலிட்டி( Environ mental Sustainability), எமர்ஜிங் டெக்னாலஜி (Emerging Technology), மேனுபேக்சரிங் (Manufacturing) ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆராய்ச்சிப் பூங்காவின் தரைத் தளத்தில் ஆடிட்டோரியம், கருத்தரங்க அரங்கம், வங்கி ஏடிஎம் ஆகியவை செயல்படும். முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் ஸ்டார்ட்அப்-பிற்கு தேவை யான அலுவலகப் பகுதிகள் இடம் பெறும் என்று கூறினார். மூன்றாம் தளத்தில் பெரு நிறு வனங்கள் இடம்பெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. அடுத்தகட்டமாக இந்த ஆராய்ச்சிப் பூங்காவை 7 மாடி கள் கொண்ட பிரம்மாண்ட கட்டடமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக முன்னாள் மாணவர்களிடம் இருந்து நிதி திரட்ட முடிவு செய்தி ருக்கின்றனர். இந்த பூங்காவில் சிஇஜி கேம்பஸ் மாணவர்கள் தங்களது கிளப் உள்ளிட்ட செயல்பாடுகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.