states

img

ஆந்திரா ரயில் விபத்து பலி எண்ணிக்கை 14 ஆனது

ஞாயிறன்று இரவு ஆந்திரா  மாநிலம் விசாகப்பட்டினத் தில் இருந்து ஒடிஷாவின் ராயகடா நோக்கி சென்ற பயணிகள் ரயில்  கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த பயணிகள் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் திடீ ரென மோதிய நிலையில், 5 ரயில் பெட்டி கள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியாகினர்.  காயமடைந்தவர்கள் அருகில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். திங்களன்று மதிய நிலவரப்படி பலி யானோர் எண்ணிக்கை 14ஆனது.  காயமடைந்த அனைவருக்கும் விஜய நகர மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயம டைந்துள்ள பலரது நிலைமை கவ லைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என தகவல் வெளி யாகியுள்ளது.  ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்  பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்  படும் என ஆந்திரா அரசு அறிவித்துள்ளது. தேசிய நிவாரண நிதியில் இருந்து உயி ரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும்,  காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிர மும் வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறி வித்துள்ளது. விபத்துக்குள்ளான இரண்டு ரயில்களிலும் கவாஜ் பாதுகாப்பு கருவி பொருத்தப்படவில்லை என தக வல் வெளியாகியுள்ளது.