states

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு முற்றிலுமாக தடைவிதிக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்திடுக!

தமிழகத்தின் அமைதி-மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி

சென்னை, நவ.2-  தமிழகத்தின் அமைதியையும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலை க்கும் வகையிலான நவம்பர் 6  அன்று நடைபெறும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு முற்றிலுமாக தடை விதிக்க தமிழக அரசு சட்டப்பூர்வ மான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செய லாளர் கே. பாலகிருஷ்ணன் நவம்பர் 2 புதனன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வும், மதமோதல், கலவரத்தை தூண்டும் வகையிலும் வெறுப்பு அரசியலை முன்னெடுத்து வரு கின்றன. கடந்த அக்டோபர் 2 ஆம்  தேதி காந்தி ஜெயந்தியன்று ஆர் எஸ்எஸ் தமிழகத்தில் 60 இடங் களில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தது. இப்பேரணிகள் நடை பெற்றால் இந்த அமைப்புகள் மத மோதலை உருவாக்கும் வகை யில் கலவரத்தை தூண்டக்கூடும் எனவும், தமிழகத்தின் அமைதியை யும், சட்டம் - ஒழுங்கையும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைக்கக் கூடும் என்பதையும் சுட்டிக்காட்டி  இப்பேரணிக்கு நிரந்தர தடை  விதிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநா யக அமைப்புகளும், பொதுமக்க ளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கைகளை பரிசீலித்த தமிழக காவல்துறை அக்டோபர் 2 ஆம் தேதி அன்று நடைபெறவிருந்த பேரணிக்கு அனு மதி மறுத்தது. இந்நிலையில் நீதி மன்றத் தீர்ப்பின் மூலம் நவம்பர் 6 ஆம் தேதி பேரணிக்கு இந்த அமைப்பு அனுமதி பெற்றது. சமீபத்தில், தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் கார் சிலிண் டர் வெடிப்பு சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொறுப்பான தீவிரவாதி கள் கைது செய்யப்பட்டு பின்னர் வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு தமிழக அரசு மாற்றிய பின்னரும், தமிழ கத்தில் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்புகளும் தொடர்ந்து வெறுப்பு அரசியலை விதைத்து வருகின்றன. மதவெறியைத் தூண்டி கலவரத்தை  ஏற்படுத்த வும், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை  சீர்குலைக்கவும் திட்டமிட்டு சதி நடவடிக்கைகளில் ஈடுபட  முனை ந்துள்ளனர். பாஜகவும் கோவை சம்பவத்தை தனது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த பதற்ற சூழ்நிலை க்கு மேலும் வலுசேர்ப்பதாக ஆர் எஸ்எஸ் பேரணிகள் அமைந்து விடும் என்பதில் ஐயமில்லை. எனவே, மதவெறியைக் கிளப்பி  தமிழகத்தில்  சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கோடு ஆர்எஸ்எஸ்  சார்பாக நவம்பர் 6  அன்று நடைபெறும் பேரணி களுக்கு முற்றிலுமாக தடை  விதிக்க தமிழக அரசு சட்டப்பூர்வ மான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.