பெய்ஜிங், ஏப்.22- சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் ஏசோ நகரத்திலிருந்து தில்லி நக ருக்குச் செல்லும் விமானச் சேவை யை, சீனாவின் முதலாவது சரக்குப் போக்குவரத்து விமான நிலையமான ஏசோ ஹுவாஹு விமான நிலை யம் ஏப்ரல் 21ஆம் நாள் அதிகாரப் பூர்வமாகத் துவக்கியது. 47 டன் எடையுடைய சரக்குகளைக் கொண்டுச் சென்ற விமானம் ஒன்று அன்று புறப்பட்டது. திட்டப்படி இந்த விமானச் சேவை வாரந்தோறும் 3 முறை வழங்கப்படும். இச்சேவையின் மூலம் மின்னணுப் பொருட்கள், பொதுவான சரக்குகள், விரைவஞ்சல் பொருட்கள் முதலி யவை சீனாவிலிருந்து இந்தியா வுக்கு அனுப்பப்படும். மேலும், வாரந்தோறும் சீனா-இந்தியா இடை யேயான சரக்கு போக்குவரத்தில் 300 டன்னுக்கு மேலான சரக்குகளை அனுப்ப முடியும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.